என் தலை அவமானத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது: மெகபூபா முஃப்தி

Published:

kashmir mufti stone pelting issue - 2026

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற கல்வீச்சு வன்முறையில், காஷ்மீரில் பயணம் மேற்கொண்டிருந்த தமிழக இளைஞர் திருமணி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, என் தலை அவமானத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணி, காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் – குல்மார்க் சாலையில் நார்பல் பகுதியில் திங்கள் கிழமை சென்று கொண்டிருந்த போது, அவர் வந்த வாகனம் மீது கல்லெறிந்துள்ளனர் காஷ்மீர் இளைஞர்கள். படுகாயமடைந்த அந்த நபர் உடனடியாக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

சென்னையைச் சேர்ந்த அந்த நபர் ராஜவாலி என்பவரின் மகன் திருமணி (வயது 22) என்று அடையாளம் காணப்பட்டது. அவர் உடனடியாக ஸ்ரீநகரில் உள்ள சேர் இ காஷ்மிர் இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டதாகவும், பலத்த காயமடைந்த நிலையில், திங்கள் மாலை அவர் உயிரிழந்ததாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, பின்னர் அந்த நபர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தார்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இந்நிலையில் காஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் பலியான தமிழக இளைஞர் திருமணி உடலை சொந்த ஊர் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவரது உடலை இன்று பிற்பகல் தமிழகத்திற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கூறும் போது, என் தலை அவமானத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது, மிகவும் வருத்தமாக இருக்கிறது என கூறினார். மேலும், இந்தச் சம்பவத்தில் இளம் பெண் ஒருவரும் பலத்த காயம் அடைந்தார். இருவரின் நிலை குறித்து குறிப்பிட்டு, டிவிட்டர் பதிவில் தனது இரங்கலையும் இந்தச் சம்பவத்துக்காக தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img