போக்ரான்-2 அணு சோதனை நடத்திய 20 ஆண்டுகளில்…!

vajpayee nuclear pokhran anniversary package - 2026

போக்ரான்-2 அணு சோதனை நடந்து முடிந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த நாள் இந்திய வரலாற்றில் சிறப்பு நாளாகக் கொண்டாடப் படுகிறது. இந்திய தொழில்நுட்ப தினம் என்று சிறப்பு பெற்றுள்ளது இந்த நாள். அன்றைய பிரதமர் வாஜ்பேயி மன தைரியத்துடன் இந்த நாளை சாதித்துக் காட்டினார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 1998ல் இதே மே 11ம் நாளில், ராஜஸ்தானின் போக்ரான் பாலைவனப் பகுதியி்ல் அணு குண்டு சோதனையை நடத்திக் காட்டினார். அப்போதைய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த அப்துல் கலாம் தலைமையிலான குழு இதனை மிகக் கச்சிதமாக நடத்தியது.

pokhran2 - 2026மே 11, மே 13 என இரு நாட்களில் சக்தி 1, சக்தி 2, சக்தி 3, சக்தி 4, சக்தி 5 என மொத்தம் 5 அணு குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஒன்று ‘தெர்மோ நியூக்ளியர் பாம்’ எனப்படும் ‘ஹைட்ரஜன் குண்டு’. Nuclear fusion எனப்படும் அணுக்கள் இணைவுச் சோதனை ஒன்றும், Nuclear fission எனப்படும் அணுப் பிளவுச் சோதனை 4ம் என மொத்தம் ஐந்து சோதனைகள்.

pokhran - 2026கடந்த 1974-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, இந்தியா முதன்முதலாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதன்பின், 1998-ம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் அடுத்தடுத்து 5 அணுகுண்டு சோதனைகளை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நடத்திக் காட்டினார். அதன்பின், 1999-ம் ஆண்டு மே 11-ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வாஜ்பேயி தலைமையில் நடத்திய போக்ரான் அணுகுண்டு சோதனை மூலம், இந்தியாவின் சக்தியை உலகம் அறிந்து கொண்டது. விஞ்ஞானிகள் இந்த நாட்டை பெருமைப்படுத்தினர். அணுகுண்டு சோதனை நடத்தியவுடன், இந்தியா மீது மற்ற நாடுகள் பொருளாதார தடை விதித்தன. அதை கண்டு வாஜ்பேயி பயப்படவில்லை. தொடர்ந்து அணுகுண்டு சோதனை நடத்த நடவடிக்கை எடுத்தார். அப்போது வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால், நிச்சயம் பொருளாதார தடையால் தயங்கியிருப்பார்கள், பயந்திருப்பார்கள். ஆனால், வாஜ்பேயி வித்தியாசமானவர். தனது துணிச்சலை காட்டினார்.

vajpayee pokran 20101101 - 2026இந்த அணு சோதனை நடந்த பின்னர் வந்த புகைப்படம் ஒன்று மிகவும் பிரபலமானது. அடல் பிஹாரி வாஜ்பேயி, அப்துல் கலாம், ஜார்ஜ் பெர்ணாண்டஸ் என மூவரும் இந்தியாவின் புகழை, ஒற்றுமையை, நல்லிணக்கத்தைப் பறை சாற்றுவது போல் நின்று போஸ் கொடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories