பேரம் படிந்தது; குமாரசாமி பணிந்தார்; பரமேஸ்வர் துணை முதல்வர் ஆகிறார்!

dk shivakumar kumaraswamy - 2026

கர்நாடகத்தில் குமாரசாமியை முன்வைத்து காங்கிரஸ் நடத்திய பேரம் ஒருவழியாகப் படிந்தது. முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்  கொடுத்து, மற்ற அனைத்து முக்கியத் துறைகளையும் காங்கிரஸே மீண்டும் பெற்றுவிட காய் நகர்த்தியது. அதன்படி, இரு கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், குமாரசாமி பதவியேற்ற பின்னர் இந்தக் குழுவை அமைக்கலாம் என்று கூறப்பட்டதால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே கர்நாடகத்தில் துணை முதல்வர் பதவியையும், அவைத்தலைவர் பதவியையும் காங்கிரஸ் பெறுகிறது. காங்கிரஸின் நெருக்குதலுக்கு அடிபணிந்த குமாரசாமி, இதற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி துணை முதல்வராக கர்நாடக காங்கிரஸ் தலைவரான பரமேஸ்வர் பதவி ஏற்க வுள்ளதாக தகவல் வெளியானது. இன்னொரு தலைவரான டி.கே.சிவகுமாரும் துணை முதல்வர் பதவிக்கு கண் வைத்தார். ஆனால் அவரது வேண்டுகோள் செவிமடுக்கப் படவில்லை.

கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி நாளை பொறுப்பேற்கிறார். இதை முன்னிட்டு நேற்று தில்லிக்குச் சென்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், அவரது தாயார் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கர்நாடகத்தில் அதிகாரப் பகிர்வு என்பதைத் தாண்டி, நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக உடனிருந்த கர்நாடக காங்கிரஸ் முக்கியத் தலைவர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, கர்நாடகத்தில் துணை முதல்வர் பதவியையும், அவைத்தலைவர் பதவியையும் காங்கிரசுக்கு கொடுக்க குமாரசாமி ஒப்புக் கொண்டார். புதன்கிழமை நாளை குமாரசாமி பதவியேற்கும் போது, காங்கிரஸ் சார்பில் துணை முதலமைச்சராக பரமேஸ்வரும் பதவியேற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

1 COMMENT

  1. இது தான் அரசியல் என்பதா ? யாரும் மக்களுக்கு சேவை செய்ய விரும்பவில்லை அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் அது தான் எண்ணம் ,வீரப்பா சொன்ன நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும் என்பது நினைவுக்கு வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories