பேரம் படிந்தது; குமாரசாமி பணிந்தார்; பரமேஸ்வர் துணை முதல்வர் ஆகிறார்!

dk shivakumar kumaraswamy - 2026

கர்நாடகத்தில் குமாரசாமியை முன்வைத்து காங்கிரஸ் நடத்திய பேரம் ஒருவழியாகப் படிந்தது. முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்  கொடுத்து, மற்ற அனைத்து முக்கியத் துறைகளையும் காங்கிரஸே மீண்டும் பெற்றுவிட காய் நகர்த்தியது. அதன்படி, இரு கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், குமாரசாமி பதவியேற்ற பின்னர் இந்தக் குழுவை அமைக்கலாம் என்று கூறப்பட்டதால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே கர்நாடகத்தில் துணை முதல்வர் பதவியையும், அவைத்தலைவர் பதவியையும் காங்கிரஸ் பெறுகிறது. காங்கிரஸின் நெருக்குதலுக்கு அடிபணிந்த குமாரசாமி, இதற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி துணை முதல்வராக கர்நாடக காங்கிரஸ் தலைவரான பரமேஸ்வர் பதவி ஏற்க வுள்ளதாக தகவல் வெளியானது. இன்னொரு தலைவரான டி.கே.சிவகுமாரும் துணை முதல்வர் பதவிக்கு கண் வைத்தார். ஆனால் அவரது வேண்டுகோள் செவிமடுக்கப் படவில்லை.

கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி நாளை பொறுப்பேற்கிறார். இதை முன்னிட்டு நேற்று தில்லிக்குச் சென்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், அவரது தாயார் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கர்நாடகத்தில் அதிகாரப் பகிர்வு என்பதைத் தாண்டி, நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக உடனிருந்த கர்நாடக காங்கிரஸ் முக்கியத் தலைவர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, கர்நாடகத்தில் துணை முதல்வர் பதவியையும், அவைத்தலைவர் பதவியையும் காங்கிரசுக்கு கொடுக்க குமாரசாமி ஒப்புக் கொண்டார். புதன்கிழமை நாளை குமாரசாமி பதவியேற்கும் போது, காங்கிரஸ் சார்பில் துணை முதலமைச்சராக பரமேஸ்வரும் பதவியேற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

1 COMMENT

  1. இது தான் அரசியல் என்பதா ? யாரும் மக்களுக்கு சேவை செய்ய விரும்பவில்லை அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் அது தான் எண்ணம் ,வீரப்பா சொன்ன நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும் என்பது நினைவுக்கு வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories