பேரம் படிந்தது; குமாரசாமி பணிந்தார்; பரமேஸ்வர் துணை முதல்வர் ஆகிறார்!

dk shivakumar kumaraswamy - 2026

கர்நாடகத்தில் குமாரசாமியை முன்வைத்து காங்கிரஸ் நடத்திய பேரம் ஒருவழியாகப் படிந்தது. முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்  கொடுத்து, மற்ற அனைத்து முக்கியத் துறைகளையும் காங்கிரஸே மீண்டும் பெற்றுவிட காய் நகர்த்தியது. அதன்படி, இரு கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், குமாரசாமி பதவியேற்ற பின்னர் இந்தக் குழுவை அமைக்கலாம் என்று கூறப்பட்டதால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே கர்நாடகத்தில் துணை முதல்வர் பதவியையும், அவைத்தலைவர் பதவியையும் காங்கிரஸ் பெறுகிறது. காங்கிரஸின் நெருக்குதலுக்கு அடிபணிந்த குமாரசாமி, இதற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி துணை முதல்வராக கர்நாடக காங்கிரஸ் தலைவரான பரமேஸ்வர் பதவி ஏற்க வுள்ளதாக தகவல் வெளியானது. இன்னொரு தலைவரான டி.கே.சிவகுமாரும் துணை முதல்வர் பதவிக்கு கண் வைத்தார். ஆனால் அவரது வேண்டுகோள் செவிமடுக்கப் படவில்லை.

கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி நாளை பொறுப்பேற்கிறார். இதை முன்னிட்டு நேற்று தில்லிக்குச் சென்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், அவரது தாயார் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கர்நாடகத்தில் அதிகாரப் பகிர்வு என்பதைத் தாண்டி, நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக உடனிருந்த கர்நாடக காங்கிரஸ் முக்கியத் தலைவர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, கர்நாடகத்தில் துணை முதல்வர் பதவியையும், அவைத்தலைவர் பதவியையும் காங்கிரசுக்கு கொடுக்க குமாரசாமி ஒப்புக் கொண்டார். புதன்கிழமை நாளை குமாரசாமி பதவியேற்கும் போது, காங்கிரஸ் சார்பில் துணை முதலமைச்சராக பரமேஸ்வரும் பதவியேற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

1 COMMENT

  1. இது தான் அரசியல் என்பதா ? யாரும் மக்களுக்கு சேவை செய்ய விரும்பவில்லை அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் அது தான் எண்ணம் ,வீரப்பா சொன்ன நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும் என்பது நினைவுக்கு வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

Entertainment News

Popular Categories