இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு வயது 48 ! மோடி வாழ்த்து ட்வீட்!

Published:

rahulgandhi birthday horz - 2026

புதுதில்லி: இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவருக்கு இது 48வது பிறந்த நாள். அதற்காக மோடி உள்ளிட்ட தலைவர்கள் ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி ராகுல் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். தில்லி கட்சித் தலைமையகத்தில் மேள தாளத்துடன் கட்சியினர் கொண்டாடினர்.

தனது முப்பது வயதுக்கு மேல், குறிப்பாக 2004 ஆம் ஆண்டு முதல் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கிய ராகுல், இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றி கடந்த 2013இல் கட்சியின் துணை தலைவர் ஆக உயர்ந்து, 2017இல் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். அவருக்கு இன்று 48 வது பிறந்த நாள். இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் நேரிலும், போனிலும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். கட்சி தலைமையகத்தில் ராகுலுக்கு கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு களை கட்டுகிறது இடம். .

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இதனிடையே பிரதமர் மோடி ராகுலுக்கு தனது வாழ்த்துகளை டிவிட்டர் பதிவில் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவரது பதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! அவர் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ராகுலின் பிறந்த நாளை கட்சித் தொண்டர்கள் டிவிட்டரில்  #HappyBirthdayRahulGandhi ஹேஷ் டாக் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img