கனமழை வெள்ளம்; தடுமாறும் மும்பை! மிதக்கும் கோல்கத்தா!

mumbai rain 1 - 2026

கனமழை காரணமாக மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இரு மெட்ரோ நகரங்களிலும் உள்ள முக்கியச் சாலைகளும், ரயில்வே வழித்தடங்களும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய வர்த்தக நகரான மும்பை, வழக்கம் போல் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளது. மும்பை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. பாந்த்ரா, அந்தேரி, சயான், செம்பூர் ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் மழைநீர் புகுந்துள்ளதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும், கார்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

கனமழையால், ரயில் தண்டவாளங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் மண் அரிப்பும் ஏற்பட்டதால், வெளியூர் மற்றும் புறநகர் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன. கன மழைக்கு ஒரே நாளில் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

தென்மேற்குப் பருவ மழையின் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மேற்கு வங்கத்தில் பரவலாக கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இடி மின்னல் தாக்கி 5 பேரும், நீரில் மூழ்கி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோல்கத்தாவில் மகாத்மா காந்தி சாலை, சையத் அமீர் அலி அவென்யூ உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. நகரின் உள் பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள ரயில்வே வழித் தடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories