இயற்கையுடன் இயைந்து வாழக் கற்றுக் கொடுக்கும் ஹிந்துத்துவம்!

Published:

monkeys man - 2026

ஹிந்துத்துவம் ஒரு வாழ்க்கை வழிமுறை. வாழ வழிகாட்டும் நெறிமுறை. ஹிந்து என்ற ஒரு சொல், ஒரு மதத்தைக் குறிப்பிட்டு ஒரு இனத்தை அதனுள் அடக்கி விடுவதல்ல.

இந்த நாட்டில் எத்தனையோ இனங்களைச் சேர்ந்த ரிஷிகள், முனிவர்கள், மக்கள் தங்கள் அனுபவங்களை வாழ்க்கை வழிமுறையாக்கிக் கொடுத்தனர். ஹிந்துத்துவம் என்பது, அதன் அடிப்படையில் இந்த நாட்டின் மண்ணின் தன்மைக்கு ஏற்ப கடைபிடிக்கப் படுவதுதான்!

அனைத்து உயிர்களையும் இறைவனின் படைப்பாக மட்டுமல்ல, இறை அம்சம் கொண்டதாகவே கருதுவது ஹிந்துத்துவம். யானை, பூனை, நாய், பாம்பு, குரங்கு, எறும்பு என அனைத்து ஜீவராசிகளிடத்தும் இறைவன் உறைகின்றான் என்று சொல்லி, அவற்றை வணங்குவதும், அவை வாழ வழி செய்தும் கற்றுக் கொடுத்தது. மண்ணும், மலையும், நீரும், நெருப்பும், எல்லாம் இறை அம்சமே என்றனர்.

சக மனிதனின் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் என்ற அளவோடு நின்றுவிடாமல், மற்ற உயிர்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் காட்டைப் போற்றி வன நாராயணனாக வழிபட்டு, குரங்கையும் அனுமன் தோழனாக வழிபட்டு, யானை, புலி, சிங்கம், காளை எல்லாம் இறைவன் செல்லும் வாகனங்களாக்கி ஆன்மிகச் சிந்தையுள் புகுத்தினார்கள்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இவை, உயிரி சமநிலைக்கு உத்வேகம் ஊட்டுவது. அந்த வகையில் குரங்குக்கு உணவு படைத்து ஆன்மிக வாழ்வின் ஓர் அம்சத்தைக் காட்டுகிறார் இவர்….

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img