3 மாதங்கள் தொடர்ந்து பொருள்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து!

Published:

ration shops - 2026

ரேஷன் பொருள்களை 3 மாதம் தொடர்ந்து வாங்க வில்லை என்றால், குடும்ப அட்டைகளை ரத்து செய்யலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ரேஷன் பொருட்களை 3 மாதங்கள் தொடர்ச்சியாக வாங்காமல் இருக்கும் பொது விநியோகத் திட்ட பயனாளிகளின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் தில்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த மாநாடு முடிந்த பின்னர், மாநாட்டில் விவாதிக்கப் பட்ட விவரங்கள் குறித்து செய்தியாளர்களுடன் ராம்விலாஸ் பாஸ்வான் பகிர்ந்து கொண்டபோது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை உறுதிபடுத்த வேண்டும். உரிய பயனாளிகளுக்குத்தான் அவை அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறு மாநில அரசுகள் அறிவுறுத்தப் பட்டுள்ளன.

மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களைக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் தேவைப்படாத குடும்ப அட்டைதாரர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய இயலும் என்றார் பாஸ்வான்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

மாநிலங்களில், பட்டினிச் சாவு ஏற்படாமல் மக்களுக்கு உணவு தானியங்களை கிடைக்கச் செய்ய இதன் மூலம் முடியும் என்று கூறிய அவர், ரேஷன் கடைகளுக்கு வந்து பொருள்களை வாங்க இயலாத நிலையில் இருப்பவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க வழி செய்யுமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img