February 20, 2026, 11:12 PM
26.7 C
Chennai

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க இன்றே கடைசி நாள்

01 June30 aadhar card pan card - 2026மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இவை இரண்டையும் இணைக்க இன்றே கடைசி நாளாகும். இது 5வது முறையாக மத்திய அரசு வழங்கிய நீட்டிப்பாகும்.

உச்ச நீதிமன்றம் பல அரசு சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைக்கக் கடைசித் தேதியைக் காலவரையின்றி ஒத்தி வைத்த நிலையில் ஆதார் – பான் இணைப்பிற்கு இது செல்லாது என்று கூறப்படுகிறது.

வருமான வரித் துறை சட்டப் பிரிவு 133 AA (2)-ன் கீழ் 2017 ஜூலை 1-க்கு முன்பு வரை யாரிடம் எல்லாம் பான் கார்டு உள்ளதோ அவர்கள் எல்லாம் இந்த இணைப்பினை செய்ய வேண்டும், இல்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது என்று கூறுகிறது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

வருமான வரி தாக்கல் இணையதளமான www.incometaxindia.gov.in-க்கு சென்று பான் எண், பிறந்த தேதி போன்ற விவரங்களை அளித்துப் பதிவு செய்து உள்நுழைய வேண்டும். பின்னர்ச் சுயவிவர அமைவு என்ற தெரிவை தேர்வு செய்து அதில் “ஆதார் இனைப்பு” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டு ஆதார் எண்ணை உள்ளிட்டால், மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் ஒன்று வரும். அதனை உள்ளிட்டு பான் – ஆதார் இணைப்பினை செய்யலாம். இணைப்பு முடிந்த பிறகு வெற்றிகரமான இணைக்கப்பட்டதாக மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பான் – ஆதார் இணைப்பினை செய்து இருந்தால் தாக்கல் விவரங்களை அச்சிட்டுக் கையெழுத்திட்டு வருமான வரித் துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என்பதே பான் – ஆதார் இணைப்பினை செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஆகும். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண் பயன்படுத்துவதைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண் இருந்தால் வங்கிகள் கடன் வாங்கும் போது பிரச்சனை வரும், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். எனவே இணைப்பினை செய்து ஒரே பான் கார்டினை பயன்படுத்துவது நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Topics

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

Entertainment News

Popular Categories