December 5, 2025, 7:46 PM
26.7 C
Chennai

வரி பாக்கியை வசூலிக்க கிரண் பேடி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை..!

kiran bedi - 2025

புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் இருந்து மீள அரசுத் துறைகளில் உள்ள வரி பாக்கிகளை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூலிக்க புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் ஒரு நடவடிக்கையாக, வரி பாக்கி வைத்துள்ளோரின் விவரங்களை புகைப்படங்களுடன் விளம்பரம் செய்யவுள்ளார். இது இப்போதே பலரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

ஏற்கெனவே மின் கட்டண பாக்கி வைத்திருப்போர் பட்டியலை பத்திரிகைகளில் வெளியிடச் செய்தார் கிரன் பேடி. இதையடுத்து கட்டண பாக்கி வைத்திருந்த பலரும் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இதனால், கடந்த ஒரு வார காலத்தில் மின்துறைக்கு ரூ.51 கோடியே 36 லட்சம் கட்டண பாக்கி வசூலாகியுள்ளது.

இந்நிலையில், வரி பாக்கிகளை வசூலிப்பது தொடர்பாக கிரண் பேடி தலைமையில் நடைபெற்ற அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டத்தில் மின்வரி, கலால்வரி, வணிகவரி, சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட வரிகளை வசூலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

கால அவகாசம் முடிந்தும் வரி பாக்கி வைத்திருப்பவர்களின் சொத்துகளை  ஏலம் விட வேண்டும். சட்ட பூர்வ பரிசீலனைக்கு பிறகு அரசு இதனைச் செய்ய வேண்டும். வரி கட்டாமல் உள்ளவர்களின் நிலத்தில் ஏலம் விடப்படப் போவது குறித்து அவரது பெயருடன் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்.

நீண்ட காலம் வரி கட்டாதவர்களின் பெயர்களை ஊடகங்களிலும், துறைகளின் இணைய தளங்களிலும் வெளியிட வேண்டும். இணைய தளங்களில் வெளியிடும் போது வரி கட்டாதவர்களின் புகைப் படத்தையும் வெளியிட வேண்டும்.

வணிகவரித்துறை ஆணையர், ஒவ்வொரு மாதமும் சட்டத்துறை செயலரை சந்தித்து, அரசு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் வழக்குகளை முடிப்பது குறித்து பேச வேண்டும்.

நிதித் துறைச் செயலர் 15 நாட்களுக்கு ஒரு முறை மறு ஆய்வுக் கூட்டம் நடத்தி, வரிவசூல் தொடர்பாக நடைமுறைச் சிக்கல்களைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப் பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories