December 5, 2025, 9:28 PM
26.6 C
Chennai

இடிந்து சரிந்த பாலம்; அறுந்து விழுந்த கம்பி; சமயோஜித ரயில் டிரைவரால் காப்பாற்றப்பட்ட பயணிகள்!

andheri bridge final - 2025

மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள ரயில்வே பாதைக்கு மேலே செல்லும் மேம்பாலத்தில் திடீரென நடைபாதைப் பகுதி இடிந்து சரிந்தது. இதில், பாலத்தின் கீழ் செல்லும் ரயில் பாதையில் உள்ள மின் கம்பிகளும் சரிந்து ரயில் பாதையிலேயே விழுந்தன. காலை 7.30க்கு ரயில்வே நிலைய நடைமேடை 7-8க்கு இடைப்பட்ட பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.

gokhale bridge andheri station collapse western - 2025

எஸ்.வி. சாலையில் உள்ள கோகலே பாலம், அந்தேரி கிழக்கு மற்றும் அந்தேரி மேற்கு ரயில் நிலையங்களை இணைக்கும் மிக முக்கியமான பாலம். தகவல் அறிந்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், உடனடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டார் என்றாலும், மழைக்காலத்தில் மும்பையில் தொடரும் இது போன்ற விபத்துகள் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் மெத்தனமாக இருப்பது தவறு என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

mumbai andheri station gokhale bridge collapse - 2025

கடந்த வருடம் நிகழ்ந்த குறுகிய நடைப் பால விபத்தைப் போல் இந்த ஆண்டு நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், இதைத் தொடர்ந்து ரயில்வே பாதைக்கு மேல் செல்லும் மேம்பாலங்கள், மற்றும் மும்பை மேம்பாலங்கள் திறன் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

 

இதனிடையே,  ரயி்ல் டிரைவர் சமயோசிதமாக செயல்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது என்று பாராட்டிய மத்திய அமைச்சர், அவருக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அறிவித்தார்.

mumbai rail driver - 2025

இந்தப் பாலம் இடிந்து விழுவதை, தொலைவிலேயே கவனித்தார் அந்த டிரைவர். உடனடியாக செயல்பட்ட அவர், அவசரகால பிரேக்கை போட்டு, ரயிலை நிறுத்தினார். இதனால் ஏராளமான பயணிகள் உயிர் தப்பித்தனர். மேலும், உயர் மின்னழுத்த கம்பிகள் ரயில் பாதையிலேயே அறுந்து விழுந்தது. இது மட்டும் ரயில் மீது விழுந்திருந்தால், மின்சாரம் பாய்ந்து பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும். எனவே, சமயோசிதமாக செயல்பட்டுரயிலை நிறுத்திய ரயில் டிரைவருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

mumbai andheri station gokhale bridge collapse - 2025

மஹாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த மழையில் மும்பை அந்தேரி ரயில்வே நிலையத்தின் அருகில் உள்ள மேம்பாலத்தின் நடைப்பாலப் பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது.  பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது, ஈரம் காரணமாக நடை மேம்பாலத்தின் பக்கவாட்டுப் பகுதிகள் வலுவிழந்து இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories