இடிந்து சரிந்த பாலம்; அறுந்து விழுந்த கம்பி; சமயோஜித ரயில் டிரைவரால் காப்பாற்றப்பட்ட பயணிகள்!

andheri bridge final - 2026

மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள ரயில்வே பாதைக்கு மேலே செல்லும் மேம்பாலத்தில் திடீரென நடைபாதைப் பகுதி இடிந்து சரிந்தது. இதில், பாலத்தின் கீழ் செல்லும் ரயில் பாதையில் உள்ள மின் கம்பிகளும் சரிந்து ரயில் பாதையிலேயே விழுந்தன. காலை 7.30க்கு ரயில்வே நிலைய நடைமேடை 7-8க்கு இடைப்பட்ட பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.

gokhale bridge andheri station collapse western - 2026

எஸ்.வி. சாலையில் உள்ள கோகலே பாலம், அந்தேரி கிழக்கு மற்றும் அந்தேரி மேற்கு ரயில் நிலையங்களை இணைக்கும் மிக முக்கியமான பாலம். தகவல் அறிந்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், உடனடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டார் என்றாலும், மழைக்காலத்தில் மும்பையில் தொடரும் இது போன்ற விபத்துகள் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் மெத்தனமாக இருப்பது தவறு என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

mumbai andheri station gokhale bridge collapse - 2026

கடந்த வருடம் நிகழ்ந்த குறுகிய நடைப் பால விபத்தைப் போல் இந்த ஆண்டு நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், இதைத் தொடர்ந்து ரயில்வே பாதைக்கு மேல் செல்லும் மேம்பாலங்கள், மற்றும் மும்பை மேம்பாலங்கள் திறன் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

 

இதனிடையே,  ரயி்ல் டிரைவர் சமயோசிதமாக செயல்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது என்று பாராட்டிய மத்திய அமைச்சர், அவருக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அறிவித்தார்.

mumbai rail driver - 2026

இந்தப் பாலம் இடிந்து விழுவதை, தொலைவிலேயே கவனித்தார் அந்த டிரைவர். உடனடியாக செயல்பட்ட அவர், அவசரகால பிரேக்கை போட்டு, ரயிலை நிறுத்தினார். இதனால் ஏராளமான பயணிகள் உயிர் தப்பித்தனர். மேலும், உயர் மின்னழுத்த கம்பிகள் ரயில் பாதையிலேயே அறுந்து விழுந்தது. இது மட்டும் ரயில் மீது விழுந்திருந்தால், மின்சாரம் பாய்ந்து பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும். எனவே, சமயோசிதமாக செயல்பட்டுரயிலை நிறுத்திய ரயில் டிரைவருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

mumbai andheri station gokhale bridge collapse - 2026

மஹாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த மழையில் மும்பை அந்தேரி ரயில்வே நிலையத்தின் அருகில் உள்ள மேம்பாலத்தின் நடைப்பாலப் பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது.  பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது, ஈரம் காரணமாக நடை மேம்பாலத்தின் பக்கவாட்டுப் பகுதிகள் வலுவிழந்து இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories