பெங்களூரு: பெங்களூரின் புறநகர்ப் பகுதியான பன்னரகட்டாவில் 6 வயதுச் சிறுமி ஒருவள், தனது சகோதரனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளிச் சிறுவர்கள் சிலர் சிறுமியை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கே வைத்து அவளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனிடையே தன்னுடன் விளையாடிக் கொண்டிர்ந்த அந்தச் சிறுமி திடீரெனக் காணாததால், பயந்து போன அவளது சகோதரன் அந்தப் பகுதியில் தேடியுள்ளான். அப்போது பள்ளிச் சிறுவர்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததை அறிந்து ஓடிச் சென்று தனது தாத்தா பாட்டியிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டுள்ளர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மருத்துவப் பரிசோதனையில் அந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதை அடுத்து, பெங்களூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரும் சிறுவர்கள் என தெரிய வந்ததையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களின் விசாரணையில் ஒரு சிறுவன் அகப்பட்டான். தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
6 வயதுச் சிறுமி 16 வயதுச் சிறுவர்களால் பலாத்காரம்: பெங்களூரில் கொடூரம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

