புது தில்லி :
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கைப் பயணம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவிட்டியுள்ளார்.
புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் வெசாக் (புத்த பூர்ணிமா) தினம் என்ற பெயரில் இலங்கையில் புத்த மதத்தினர் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
புத்த பூர்ணிமா இலங்கையில் சிறப்பாகக் கொண்டாடப் படுவது வழக்கம். நாளை முதல் 3 நாட்கள் இலங்கையில் இவ்விழா நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
புத்த பூர்ணிமா திருவிழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக அவர் இன்று கொழும்பு நகருக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள மோடி இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். இதன் போது வெசாக் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பேன் என்று டுவிட்டியுள்ளார்.
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். https://t.co/MHGfTxALih
— Narendra Modi (@narendramodi) May 11, 2017
இதன் போது வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இணைந்து கொள்வேன்.
— Narendra Modi (@narendramodi) May 11, 2017