புது தில்லி: இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. ஒன்பது நிமிடங்கள் ஓடும் வீடியோ காட்சி ஒன்றை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் இந்தியப் பிரிவு தலைவரான ஆசிம் உமர் என்பவர் இதில் பேசியுள்ளார். உலக வங்கி, ஐஎம்எப் மூலமாக இஸ்லாமியர்களை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாகத் தாக்கி வருவதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக இஸ்லாமியர்களின் எதிரி மோடி என்றும் அல் காய்தா குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து ரா அமைப்பு இந்த வீடியோ செய்தி குறித்த விசாரணையில் இறங்கியுள்ளது. இந்த வீடியோவை அல் கொய்தா ஆதரவு இணையதளமான அல் சஹாப் வெளியிட்டுள்ளது
பிரதமர் மோடிக்கு அல் காய்தா கொலை மிரட்டல்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

