திருச்சி: திருச்சி அருகே 14 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்து, கர்ப்பம் உண்டாக்கிய 70 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (70). இவரது சொந்த ஊர் திருப்பூர். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 14வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், அந்தச் சிறுமி, தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், அந்தச் சிறுமி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை ஞாயிற்றுக்கிழமை நேற்று கைது செய்தனர். அந்தச் சிறுமி தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
14 வயது சிறுமி பலாத்காரம் செய்து கர்ப்பம்: 70 வயது முதியவர் கைது
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

