பாவ மன்னிப்பு விஷயத்தை வெளியில் சொல்லி விளம்பரப் படுத்தியதால் மனமுடைந்த கேரளப் பெண் தற்கொலை.. !

lilly kerala suicide - 2026
லில்லி ஜார்ஜ் (picture courtesy: mathrubhumi)

பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில், சர்ச் பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்டு, அதனை வெளியில் பகிரங்கப் படுத்தி விளம்பரம் செய்ததால், மானத்துக்கு அஞ்சிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இப்போது பெரும் பூதாகாரமாகக் கிளம்பியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்து 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போதுதான் இது மீண்டும் தூசு தட்டி எடுக்கப் பட்டுள்ளது. அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக, இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி, கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாவ மன்னிப்பு – இப்போது பெரும் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது. மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு மனம் உருகி கடவுளிடம் பிரார்த்தனை செய்து, தனது தவறுகளை மன்னித்து தன்னை நேராக்குமாறு கோருவது, ஆன்மிக நிலையில் திகழும் ஒருவருக்கு இயல்பான விஷயம். ஆனால், அதற்கு மத விஷயங்களில் பயிற்சி பெற்ற பாதிரியார் என்று ஒருவரை வைத்து, பணத்தாசையும் பெண்ணாசைஉம் கொண்ட, மனிதத் தன்மை இல்லாத அரக்க குணம் கொண்டவர்களாக அவர்கள் திகழும் போது, பாவ மன்னிப்பு என்பது பலரது வாழ்வை முடித்துக் கொள்ளும் விபரீதமாகி விடுகிறது. கடவுளுக்கும் மனிதனுக்கு நடுவே பயிற்சி பெற்ற இடைத் தரகர்களாகத் திகழ்பவர்கள், வெறும் சடங்குகளைச் செய்பவர்களாக நின்றுவிட்டால் பிரச்னை இருக்காது.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

கேரளாவில் தற்போது, இந்தப் பாவ மன்னிப்புகள் விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பாவ மன்னிப்பு கேட்டு பாதிரியாரிடம் மண்டியிட்ட பெண்ணை, ஐந்து பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்த புகார்; கன்னியாஸ்திரியை பிஷப் ஒருவர் 14 முறை பலாத்காரம் செய்தது என மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள சம்பவங்கள் இப்போது ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது. அந்த வரிசையில் இப்போது மேலும் ஒரு சம்பவம் சற்று தாமதமாக வெளியாகி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்த லில்லி என்பவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தற்போது லில்லியின் சகோதரி லைலாமா ஜார்ஜ் என்பவர் ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

kerala lilly suicide - 2026
லில்லியின் சகோதரி லைல தாமஸ் (picture courtesy: mathrubhumi)

அயிரூர் சென்ட் ஜான் சர்ச்சில் பணியாற்றும் பாதிரியார் ஒருவரிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன் என் சகோதரி பாவ மன்னிப்பு கோரினார். அவர் கல்லூரியில் படித்த போது ஏற்பட்ட நடந்த ஒரு தவறு குறித்து அவர் பாவமன்னிப்பு கோரியிருந்தார். ஆனால் அந்தத் தகவலை ரகசியமாக வைத்திருக்காத பாதிரியார், வேறொரு பெண்ணிடம் விலாவாரியாகக் கூறிவிட்டார். அந்தப் பெண்ணோ பலர் முன்னிலையில் என் சகோதரி குறித்த ரகசியத்தை விளம்பரப் படுத்தி விட்டார். இதனால் என் சகோதரி அவமானம் அடைந்தார். கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். ஏற்கெனவே அந்த பாதிரியாருக்கும் என் சகோதரியின் கணவருக்கும் இடையில் முன் விரோதம் இருந்துள்ளது. எனவே அவள் கணவரை கேவலப்படுத்துவதற்காக, என் சகோதரி கேட்ட பாவமன்னிப்பை ஒரு கருவியாக எடுத்துக் கொண்டார் அந்த பாதிரியார். இந்தக் காரணத்தால், கடும் மன உளைச்சலில் இருந்த என் சகோதரி 2015ம் வருடம் அக்டோபர் 21ஆம் தேதி பம்பை ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக் கடிதத்தில், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் பாதிரியாரின் செயலையும், ஒரு பெண்ணையும் குறிப்பிட்டிருந்தார்.  ஆனால், நாங்கள் இந்த விவகாரத்தை விடப் போவதில்லை. போலீஸில் புகார் அளிக்கவுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!
kerala lilly suicide letter - 2026
லில்லி தான் தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதி வைத்த கடிதம் (picture courtesy: mathruboomi)

பாவ மன்னிப்பு விவகாரம் இன்னும் எத்தனை குடும்பங்களைச் சிதைத்துள்ளதோ என்று பலரும் பரிதவித்து வருகின்றனர். தங்கள் பலவீனங்களை பாவ மன்னிப்பு என்ற வலையில் பாதிரிகளிடம் சொல்லி, தங்கள் வாழ்க்கையை, எதிர்காலத்தை நினைத்து பலரும் இப்போது கவலை கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories