ரஃபேலை வைத்து மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் திட்டமிடும் ஊழல் பிரசாரம்!

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில்…

புது தில்லி: கடந்த நான்கு ஆண்டு பாஜக., ஆட்சியில் பெரிதாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்க இயலாத நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் செய்யலாம் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதற்காக அது கையில் எடுத்திருக்கும் விவகாரங்கள், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், பொருளாதாரத்தில் தேக்க நிலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வங்கி மோசடிகளைச் செய்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் … என இவற்றை முன்வைத்து தேசிய அளவில் பிரசாரம் செய்யப் போகிறதாம்.

தில்லியில் சனிக்கிழமை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் கூட்டப் பட்டது. இந்தக் கூட்டத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய பாஜக அரசின் பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் புரிந்திருப்பதாக பாஜக பட்டியலிட்டு வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், பாஜக., மீது ஊழல் புகார்களைத் தெரிவித்து அதன் சாதனைகளை மறைக்கலாம் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காரியக் கமிட்டி கூட்டத்தில் மன்மோகன் சிங், ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆஸாத், மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடல் நலக் குறைவால் சோனியா இதில் பங்கேற்கவில்லை.

ராகுல் காந்தி அமைத்த புதிய காரிய கமிட்டியின் இரண்டாவது கூட்டம் இது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த மத்திய அரசின் நிர்வாகக் குறைபாடுகள், முறைகேடு குற்றச்சாட்டுகள் இவற்றை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என இந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுல் வெளியிட்டிருக்கும் பதிவுகளில், “நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஊழல் விவகாரங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் மத்திய அரசு அடைந்த தோல்வி ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதற்கு காங்கிரஸுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு குறித்து காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories