கேரள வெள்ளம்… திமுக., மற்றும் நடிகர்கள் நிதி உதவி; பாஜக., உதவி மையம்!

kerala flood - 2026

சென்னை : தொடர் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் , திமுக அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் பொருட்டு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார். நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரும் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

தமிழக மக்களும், மக்கள் நீதி மய்ய கட்சி தொண்டர்களும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள கேரள மக்களைக் காக்கும் பொருட்டு தாமாகவே முன்வந்து நிதியுதவி வழங்க வேண்டும் என்று கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தை புரட்டிப் போட்டுள்ள மழை வெள்ளத்தால், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளத்துக்கு நிதி உதவி அளிக்குமாறு அம்மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கேரள அரசின் கோரிக்கையை ஏற்று பலரும் நிதியுதவி வழங்கியுள்ளனர். கேரளம் வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என டிவிட்டர் பக்கங்களில் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதனிடையே, கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவி புரியும் வகையில் பாஜக., சார்பில் கோவையில் உதவி மையம் அமைக்கப் பட்டுள்ளது. இது குறித்து பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மக்களின் துயரத்திலும், துன்பத்திலும் பாஜக., பங்கெடுக்கிறது. கேரள மக்களுக்கு உதவும் வகையில் உதவி மையம் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவை கோட்ட பாஜக., பொறுப்பாளர் செல்வகுமார் பொறுப்பாளராக இருந்து செயல்படுவார். தமிழகம் முழுவதும் இருந்து சகோதர – சகோதரிகள், 86500 20000, 94439 31666 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உங்களால் இயன்ற உதவிகள், புது துணிகள், போர்வைகள், சமையல் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை அனுப்பி வைக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி உதவி முதல்வரால் தமிழக அரசின் சார்பில் செய்யப் படும் என அரசு அறிவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories