December 5, 2025, 7:46 PM
26.7 C
Chennai

கேரள வெள்ளம்… திமுக., மற்றும் நடிகர்கள் நிதி உதவி; பாஜக., உதவி மையம்!

kerala flood - 2025

சென்னை : தொடர் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் , திமுக அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் பொருட்டு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார். நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரும் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

தமிழக மக்களும், மக்கள் நீதி மய்ய கட்சி தொண்டர்களும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள கேரள மக்களைக் காக்கும் பொருட்டு தாமாகவே முன்வந்து நிதியுதவி வழங்க வேண்டும் என்று கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தை புரட்டிப் போட்டுள்ள மழை வெள்ளத்தால், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளத்துக்கு நிதி உதவி அளிக்குமாறு அம்மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கேரள அரசின் கோரிக்கையை ஏற்று பலரும் நிதியுதவி வழங்கியுள்ளனர். கேரளம் வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என டிவிட்டர் பக்கங்களில் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதனிடையே, கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவி புரியும் வகையில் பாஜக., சார்பில் கோவையில் உதவி மையம் அமைக்கப் பட்டுள்ளது. இது குறித்து பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மக்களின் துயரத்திலும், துன்பத்திலும் பாஜக., பங்கெடுக்கிறது. கேரள மக்களுக்கு உதவும் வகையில் உதவி மையம் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவை கோட்ட பாஜக., பொறுப்பாளர் செல்வகுமார் பொறுப்பாளராக இருந்து செயல்படுவார். தமிழகம் முழுவதும் இருந்து சகோதர – சகோதரிகள், 86500 20000, 94439 31666 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உங்களால் இயன்ற உதவிகள், புது துணிகள், போர்வைகள், சமையல் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை அனுப்பி வைக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி உதவி முதல்வரால் தமிழக அரசின் சார்பில் செய்யப் படும் என அரசு அறிவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories