கேரள வெள்ளம்… திமுக., மற்றும் நடிகர்கள் நிதி உதவி; பாஜக., உதவி மையம்!

kerala flood - 2026

சென்னை : தொடர் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் , திமுக அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் பொருட்டு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார். நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரும் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

தமிழக மக்களும், மக்கள் நீதி மய்ய கட்சி தொண்டர்களும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள கேரள மக்களைக் காக்கும் பொருட்டு தாமாகவே முன்வந்து நிதியுதவி வழங்க வேண்டும் என்று கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தை புரட்டிப் போட்டுள்ள மழை வெள்ளத்தால், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளத்துக்கு நிதி உதவி அளிக்குமாறு அம்மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கேரள அரசின் கோரிக்கையை ஏற்று பலரும் நிதியுதவி வழங்கியுள்ளனர். கேரளம் வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என டிவிட்டர் பக்கங்களில் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ALSO READ:  ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

இதனிடையே, கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவி புரியும் வகையில் பாஜக., சார்பில் கோவையில் உதவி மையம் அமைக்கப் பட்டுள்ளது. இது குறித்து பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மக்களின் துயரத்திலும், துன்பத்திலும் பாஜக., பங்கெடுக்கிறது. கேரள மக்களுக்கு உதவும் வகையில் உதவி மையம் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவை கோட்ட பாஜக., பொறுப்பாளர் செல்வகுமார் பொறுப்பாளராக இருந்து செயல்படுவார். தமிழகம் முழுவதும் இருந்து சகோதர – சகோதரிகள், 86500 20000, 94439 31666 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உங்களால் இயன்ற உதவிகள், புது துணிகள், போர்வைகள், சமையல் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை அனுப்பி வைக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி உதவி முதல்வரால் தமிழக அரசின் சார்பில் செய்யப் படும் என அரசு அறிவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories