December 5, 2025, 6:16 PM
26.7 C
Chennai

குவாலியரில் அமைந்த வாஜ்பாயி கோயிலில் தினமும் கவிதைகளால் பூஜை!

vajpayee temple - 2025

மறைந்த முன்னாள் பிரதமரும் ஆர்.எஸ்.எஸ்., ஸ்வயம்சேவகருமான அடல் பிகாரி வாஜ்பாயி பெயரில் அவரது சொந்த ஊரான குவாலியரில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.

13 வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள், வாஜ்பாயி பெயரில் மதிப்பும் பாசமும் மிக்க தொண்டர்கள் சிலர் வாஜ்பாயிடம் அவருடைய ஹிந்தி கவிதைகளுக்காகவும், அவர் ஹிந்தி மொழிக்கு செய்துள்ள பங்களிப்புக்காகவும் ஒரு நினைவுக் கோயில் எழுப்ப விரும்பி அனுமதி கேட்டனர். அந்தக் கோயிலில் ஹிந்தி மொழியை குறிப்பாக கவிதைகளை வாசித்து பிரபலப் படுத்துவதுதான் நோக்கம் என்றும் கூறினர்.

ஆனால், தனி மனித வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத ஆர்.எஸ்.எஸ்.,ஸில் இருந்து வந்த வாஜ்பாய்க்கோ தர்ம சங்கடமாகிப் போனது. எனவே அவர் அவ்வாறான கோயில், சிலை இவற்றை எல்லாம் கூடாதென்று தடுத்தார். இருப்பினும் அன்பர்கள் வற்புறுத்தினர்.

குவாலியரில் வாஜ்பாய் சிறு வயதில் சத்யநாராயண் கி தேகரி கோயிலுக்கு அடிக்கடி செல்வார். எனவே அங்கே ஒரு சிறிய கோயில், வாஜ்பாய் பெயரில் கட்டியே தீருவது என்று அடம் பிடித்தனர் அன்பர்கள். வேறு வழியின்றி அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டிய நிர்பந்தம் வந்தது வாஜ்பாய்க்கு. அப்போது அவர் இரு நிபந்தனைகளை விதித்தார். கோயில் சிறிதாக இருக்க வேண்டும். அதில் தன் சிலை இடம் பெறக் கூடாது.

இதனை ஏற்றுக் கொண்ட அன்பர்கள், 2005இல் அங்கே ஒரு சிறிய சந்நிதி போல் எழுப்பினர். அதனுள் வாஜ்பாயின் உருவப் படத்தை வைத்தனர். அடிக்கடி அங்கே கூடினர். ஹிந்திக் கவிதைகளைச் சொல்லி வாஜ்பாய் நினைவுகளைப் போற்றி வந்தனர்.

வாஜ்பாயிடம் இந்த அனுமதி பெறச் சென்ற அன்பர்களில் ஒருவர் விஜய் சிங் சௌஹான். வழக்கறிஞர். அவர் இது குறித்துக் குறிப்பிட்ட போது, அடல்ஜி எங்களைக் கவர்ந்த மனிதர். கவிஞர். நாங்கள் ஹிந்தியை வளர்ப்பதற்காக ஒரு கோயில் அமைக்க முடிவு செய்தோம். அதை, வாஜ்பாய் பெயரில் அமைக்கலாம் என்று கருதினோம். காரணம், ஐ.நா. சபையில் முதல் முதலில் ஹிந்தியில் பேசி, மொழிக்கு கௌரவம் கொடுத்தவர். அவர் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடியிருப்பவர்.. என்றார்.

கவிஞர்கள், ஹிந்தி மொழி அன்பர்கள் கூடுவதற்காக வாஜ்பாய் பெயரில் இந்தக் கோவிலில் சந்நிதி அமைத்தோம். அவரால் சுய ஊக்கம் பெற்ற கவிஞர்கள் பலர். நாங்கள் அவரை தினமும் இங்கே நினைவில் கொள்கிறோம். அவர் கவிதைகளை வாசிக்கிறோம். அரசு வாஜ்பாய் பெயரில் ஒரு நினைவிடம் இங்கே அமைத்து, அவரது கவிதைகளையும் ஹிந்தியையும் பரப்ப வகை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் குவாலியரைச் சேர்ந்த கவிஞரான நஸீம் ராஃபட்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories