குவாலியரில் அமைந்த வாஜ்பாயி கோயிலில் தினமும் கவிதைகளால் பூஜை!

vajpayee temple - 2026

மறைந்த முன்னாள் பிரதமரும் ஆர்.எஸ்.எஸ்., ஸ்வயம்சேவகருமான அடல் பிகாரி வாஜ்பாயி பெயரில் அவரது சொந்த ஊரான குவாலியரில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.

13 வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள், வாஜ்பாயி பெயரில் மதிப்பும் பாசமும் மிக்க தொண்டர்கள் சிலர் வாஜ்பாயிடம் அவருடைய ஹிந்தி கவிதைகளுக்காகவும், அவர் ஹிந்தி மொழிக்கு செய்துள்ள பங்களிப்புக்காகவும் ஒரு நினைவுக் கோயில் எழுப்ப விரும்பி அனுமதி கேட்டனர். அந்தக் கோயிலில் ஹிந்தி மொழியை குறிப்பாக கவிதைகளை வாசித்து பிரபலப் படுத்துவதுதான் நோக்கம் என்றும் கூறினர்.

ஆனால், தனி மனித வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத ஆர்.எஸ்.எஸ்.,ஸில் இருந்து வந்த வாஜ்பாய்க்கோ தர்ம சங்கடமாகிப் போனது. எனவே அவர் அவ்வாறான கோயில், சிலை இவற்றை எல்லாம் கூடாதென்று தடுத்தார். இருப்பினும் அன்பர்கள் வற்புறுத்தினர்.

குவாலியரில் வாஜ்பாய் சிறு வயதில் சத்யநாராயண் கி தேகரி கோயிலுக்கு அடிக்கடி செல்வார். எனவே அங்கே ஒரு சிறிய கோயில், வாஜ்பாய் பெயரில் கட்டியே தீருவது என்று அடம் பிடித்தனர் அன்பர்கள். வேறு வழியின்றி அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டிய நிர்பந்தம் வந்தது வாஜ்பாய்க்கு. அப்போது அவர் இரு நிபந்தனைகளை விதித்தார். கோயில் சிறிதாக இருக்க வேண்டும். அதில் தன் சிலை இடம் பெறக் கூடாது.

இதனை ஏற்றுக் கொண்ட அன்பர்கள், 2005இல் அங்கே ஒரு சிறிய சந்நிதி போல் எழுப்பினர். அதனுள் வாஜ்பாயின் உருவப் படத்தை வைத்தனர். அடிக்கடி அங்கே கூடினர். ஹிந்திக் கவிதைகளைச் சொல்லி வாஜ்பாய் நினைவுகளைப் போற்றி வந்தனர்.

வாஜ்பாயிடம் இந்த அனுமதி பெறச் சென்ற அன்பர்களில் ஒருவர் விஜய் சிங் சௌஹான். வழக்கறிஞர். அவர் இது குறித்துக் குறிப்பிட்ட போது, அடல்ஜி எங்களைக் கவர்ந்த மனிதர். கவிஞர். நாங்கள் ஹிந்தியை வளர்ப்பதற்காக ஒரு கோயில் அமைக்க முடிவு செய்தோம். அதை, வாஜ்பாய் பெயரில் அமைக்கலாம் என்று கருதினோம். காரணம், ஐ.நா. சபையில் முதல் முதலில் ஹிந்தியில் பேசி, மொழிக்கு கௌரவம் கொடுத்தவர். அவர் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடியிருப்பவர்.. என்றார்.

கவிஞர்கள், ஹிந்தி மொழி அன்பர்கள் கூடுவதற்காக வாஜ்பாய் பெயரில் இந்தக் கோவிலில் சந்நிதி அமைத்தோம். அவரால் சுய ஊக்கம் பெற்ற கவிஞர்கள் பலர். நாங்கள் அவரை தினமும் இங்கே நினைவில் கொள்கிறோம். அவர் கவிதைகளை வாசிக்கிறோம். அரசு வாஜ்பாய் பெயரில் ஒரு நினைவிடம் இங்கே அமைத்து, அவரது கவிதைகளையும் ஹிந்தியையும் பரப்ப வகை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் குவாலியரைச் சேர்ந்த கவிஞரான நஸீம் ராஃபட்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories