எழுத்தாளர் குல்தீப் நய்யார் காலமானார்

Published:

guldeep naiyar - 2026

பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் உடல் நலக் குறைவு காரணமாக தில்லியில் காலமானார். அவருக்கு வயது 95.

1923ல் சியால்கோட்டில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். 1975ம் வருட நெருக்கடி நிலைக் காலத்தில், இந்திரா காந்தியால் சிறையில் தள்ளப்பட்ட முதல் பத்திரிகையாளர் இவரே.

மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யான குல்தீப் நய்யார் ஐ.நா.வில் இந்திய பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

இந்திய பாகிஸ்தான் அமைதிப் பேச்சுகளில் அதிகம் ஆர்வம் காட்டியவர். இவர் எழுதிய பியாண்ட் த லைன்ஸ் என்ற புத்தகத்தில், பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி அப்து காதர் கானின் பேட்டி இடம் பெற்றது. அதில், பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை மேற்கொண்டதாக உலகுக்கு அறிவிக்கும் வெகு காலத்துக்கு முன்பே அணு ஆயுத தயாரிப்பில் இருந்த விஷயம் வெட்ட வெளிச்சமானது.

குல்தீப் நய்யாரின் மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

பிரதமர் மோடியின் இரங்கல் பதிவு…

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img