பெருவெள்ளம் சீரழித்த சபரிமலை! காலவரையின்றி மூடல்! இந்த முறை மண்டல பூஜை..?

sabarimalai - 2026பத்தனம்திட்ட: பெரு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கான அனுமதி காலவரை இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேவசம் போர்டு கூறியுள்ளது.

இந்த வருடம் மழை இயல்பைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி, அதிகம் கொட்டித் தீர்த்தது. இதனிடையே, சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப் படலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டதும், தொடர்ந்து அனைத்து வகை வயதுப் பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியதும், இதனாலேயே ஐயப்பன் கோபம் கொண்டார், அவரது சீற்றமே பெருமழையாக பிரவாகித்தது என்றும் ஒரு சிலர் முடிச்சுப் போட்டு கூறி வருகின்றனர்.

கேரளத்தில் பரவலாக மழையால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், பத்தனம்திட்ட மாவட்டமும், பம்பையும் தான் பெரும் அழிவைச் சந்தித்திருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அருகில் ஓடும் பம்பை ஆறு பெரு வெள்ளத்தால் சீறிப் பாய்ந்தது. இதனால் கோவிலுக்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மழை ஓய்ந்து, வெள்ளம் வடிந்த நிலையிலும்,  பம்பை ஆற்று வெள்ளம் ஏற்படுத்திய சேதம் மிகப் பெரிது என்கிறார்கள்.

ALSO READ:  இக்கணம் - தேவை சிக்கனம்!

பெரு வெள்ளத்தால் பம்பை ஆறு தன் போக்கை மாற்றிக் கொண்டுள்ளது. சபரிமலை அடிவாரத்தில் திரிவேணி சங்கமத்தில் முன்பு ஆறு ஓடிய இடத்தில் பல அடி உயரத்திற்கு சேறும், சகதியும் மட்டுமே உள்ளது. ஆறு முன்பு ஓடிய இடத்தில் இருந்து 50 மீட்டர் விலகிப் பாய்கிறது. இந்நிலையில் பம்பை அணையின் குறுக்கே உள்ள இரு அணைகளையும் வனத்துறை மூடி உள்ளதால் ஆற்றில் நீரோட்டம் குறைந்துள்ளது.

பம்பை ஆற்றைக் கடக்க அமைக்கப்பட்ட இரு பாலங்கள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாலம் இல்லாததால் பம்பை ஆற்றைக் கடந்து கோவிலுக்குச் செல்ல இயலாது. பம்பை ஆற்றங்கரையில் 4000 பக்தர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டிருந்த ராமமூர்த்தி மண்டபம், பக்தர்களுக்கான குளியல் அறைகள், திரிவேணி வாகன நிறுத்தம் இடம் என, ஆற்றங்கரையில் இருந்த கட்டிடங்கள் அனைத்தையும் பம்பை ஆறு அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளது.

பம்பை பகுதியில் மட்டும் ரூ.100 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறியுள்ளது. எனவே, இவற்றை எல்லாம் சரி செய்த பின்னரே கோவிலுக்கு பக்தர்கள் இனி அனுமதிக்கப் படுவர்; அதுவரை தரிசன அனுமதி காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக தேவசம் போர்டு கூறியுள்ளது.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

ஒவ்வொரு மாதப் பிறப்பின் போதும் நடை திறக்கப் படும். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையின் போது நீண்ட நாட்கள் நடை திறந்திருக்கும். ஆனால் தற்போது, பக்தர்கள் அனுமதிக்கப் படாத நிலையில், கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று தேவசம் போர்டு கூறியுள்ளது. கார்த்திகை மாதத்துக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், இந்த முறை மண்டல பூஜைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories