கேரளத்தை சுத்தம் செய்ய 2 லட்சம் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் திரள்கிறார்கள்

Published:

kerala flood rss7 - 2026

மழையால் பாதிக்கப்பட்ட கேரளத்தில், அடுத்த சவாலான பணி, சுத்தம் செய்வதுதான். சேறும் சகதியுமாக பல வீடுகளில் நிரம்பிக் கிடக்கிறது. வெள்ளம் வடிந்த போதும், பலரும் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

சேறு நிறைந்த பல வீடுகளில், கட்டடங்களில் விஷப் பூச்சிகள், பாம்புகள் நெளிகின்றன. அவற்றை மிக ஜாக்கிரதையாக அப்புறப் படுத்த வேண்டியிருக்கிறது. இத்தகைய சவாலான வேலையை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் எதிர்கொண்டு செய்து வருகிறார்கள்.

சென்னை உள்ளிட்ட நகரங்களி இருந்து நிவாரணப் பொருள்களுடன் சுத்தம் செய்யும் பொருள்களையும் அதிகம் சுமந்து சென்றன லாரிகள். விளக்குமாறு, சுத்தம் செய்ய வேதிப் பொருள்கள் என பலவும் கொண்டு செல்லப் பட்டுள்ளன.

keralasevabharathi - 2026

இந்நிலையில், செப்டம்பர்- 1ஆம் தேதி கேரளாவின் 14 மாவட்டங்களிலிருந்து 2 லட்சம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான சேவா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன்படி, கேரளா முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும் என்று முடிவாகியுள்ளது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img