விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம்: மோடி அறிவிப்பு

புது தில்லி: விவசாயிகளுக்கு கூடுதல் சலுகையாக, கூடுதல் நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மீட்கும் விதமாக இந்த உதவியை மோடி அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் நாட்டில் பரவலாக கனமழை பெய்தது. பருவம் தவறிப் பெய்த இந்த கனமழை காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர்களில் பயிரிடப்பட்ட வேளாண் பயிர்கள், பழ வகைகள் ஆகியவை நாசம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மீட்கும் விதமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை சீரமைக்க வங்கிகளையும், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, சாதகமான முறையில் செயல்படுமாறு காப்பீட்டு நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தில்லியில் முத்ரா வங்கியைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியபோது, மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும். இதுவரை பயிர்ச் சேதம் 50 சதவீதம் என்று இருந்தால் மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என்பது மாற்றப்பட்டு, 33 சதவீதம் ஆகியிருந்தாலேயே நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்கும். விவசாயிகளுக்கு உதவுவதற்கான இரண்டாவது முக்கியமான முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். பயிர்ச் சேத நிவாரணம் முன்பு இருந்ததை விட 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது முன்னதாக ஒருவர் பயிர்சேதத்துக்காக ரூ. 1 லட்சம் பெற்று இருந்தால், இப்போது ரூ. 1.5 லட்சம் பெற முடியும் என்றார் பிரதமர் மோடி. கடந்த வருடம் விவசாயிகள் குறைந்த மழையினால் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் பருவம் தவறிப் பெய்த மழை மற்றும் பனிமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சேத விவரங்களை மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அனுப்பட்ட அமைச்சர்களிடம் கேட்டு அவர்களுடன் ஆலோசித்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories