December 5, 2025, 3:36 PM
27.9 C
Chennai

சபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்!

sabarimalai issue talks - 2025

திருவனந்தபுரம்: சபரிமலை குறித்த விவகாரத்தில், தீர்வு எட்டப்படுவதற்காக கூடிய கூட்டத்தில் சுமுகமான உடன்பாடு ஏதும் ஏற்படாத சூழலில், பந்தளம் ராஜ குடும்பத்தினரும், தந்திரிகளும் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர், பந்தளம் ராஜ குடும்பத்தினர், சபரிமலை தந்திரி ஆகியோருடன் சபரிமலையில் அனைத்து வயது பெண்களயும் அனுமதிப்பது தொடர்பான விவாதம் நடத்தப் பட்டது.

பந்தளம் குடும்பத்தினரும், தந்திரியும் ”உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, உடனே சீராய்வு மனு போட வேண்டும்” என்று கூட்டத்தில் வலியுறுத்தினர்.

ஆனால், நீதிமன்றம் விடுமுறை என்பதால் இப்போது போட முடியாது. 22ஆம் தேதிதான் சீராய்வு மனு போடமுடியும்” என்று, தேவஸ்வம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.

அப்படி எனில் அதுவரை பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்தக்கூடாது!”என பந்தளம் மகாராஜா மற்றும் தந்திரிகள் தரப்பில் கோரினர்.

அதற்கு, ”அதுதொடர்பாக வரும் 19ஆம் தேதி நடக்கும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யலாம்!” என தலைவர் கூறினார். இதை அடுத்து அரசுத் தரப்பு கூட்டிய இந்த விவாதத்தில் இருந்து தந்திரி மற்றும் ராஜகுடும்பத்தினர் வெளியேறினர்.

பெண்களை அனுமதிக்கும் ஒரே கொள்கையுடன் அரசுத் தரப்பு இருப்பதாலும், விடாப்பிடியாக எப்படியாவது பெண்கள் அனைவரையும் சபரிமலைக்கு போகச் செய்து, ஐயப்பனின் விரதத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கிவிடுவோம் என்று கம்யூனிஸ்ட் அரசு கேலிப் பார்வையுடன் அணுகுவதாலும், இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் சாதகமாக எடுக்கப்படாது என்றே அனைவரும் கருதினர். அதன்படி, அரசுத் தரப்பு தந்திரிகள் சொல்வதைக் காது கொண்டு கேட்கவே இல்லை என்பதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தியே தீருவது என்றும் உறுதியுடன் உள்ளதால், கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories