சபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்!

sabarimalai issue talks - 2026

திருவனந்தபுரம்: சபரிமலை குறித்த விவகாரத்தில், தீர்வு எட்டப்படுவதற்காக கூடிய கூட்டத்தில் சுமுகமான உடன்பாடு ஏதும் ஏற்படாத சூழலில், பந்தளம் ராஜ குடும்பத்தினரும், தந்திரிகளும் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர், பந்தளம் ராஜ குடும்பத்தினர், சபரிமலை தந்திரி ஆகியோருடன் சபரிமலையில் அனைத்து வயது பெண்களயும் அனுமதிப்பது தொடர்பான விவாதம் நடத்தப் பட்டது.

பந்தளம் குடும்பத்தினரும், தந்திரியும் ”உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, உடனே சீராய்வு மனு போட வேண்டும்” என்று கூட்டத்தில் வலியுறுத்தினர்.

ஆனால், நீதிமன்றம் விடுமுறை என்பதால் இப்போது போட முடியாது. 22ஆம் தேதிதான் சீராய்வு மனு போடமுடியும்” என்று, தேவஸ்வம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.

அப்படி எனில் அதுவரை பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்தக்கூடாது!”என பந்தளம் மகாராஜா மற்றும் தந்திரிகள் தரப்பில் கோரினர்.

அதற்கு, ”அதுதொடர்பாக வரும் 19ஆம் தேதி நடக்கும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யலாம்!” என தலைவர் கூறினார். இதை அடுத்து அரசுத் தரப்பு கூட்டிய இந்த விவாதத்தில் இருந்து தந்திரி மற்றும் ராஜகுடும்பத்தினர் வெளியேறினர்.

பெண்களை அனுமதிக்கும் ஒரே கொள்கையுடன் அரசுத் தரப்பு இருப்பதாலும், விடாப்பிடியாக எப்படியாவது பெண்கள் அனைவரையும் சபரிமலைக்கு போகச் செய்து, ஐயப்பனின் விரதத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கிவிடுவோம் என்று கம்யூனிஸ்ட் அரசு கேலிப் பார்வையுடன் அணுகுவதாலும், இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் சாதகமாக எடுக்கப்படாது என்றே அனைவரும் கருதினர். அதன்படி, அரசுத் தரப்பு தந்திரிகள் சொல்வதைக் காது கொண்டு கேட்கவே இல்லை என்பதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தியே தீருவது என்றும் உறுதியுடன் உள்ளதால், கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories