சபரிமலை விவகாரத்தில் போராட்டங்களால் கேரளாவில் பதற்றம்! போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதியில் பெண்கள்!

sabarimala2 - 2026

சபரிமலை கோயிலில் எல்லா வயதுப் பெண்களுக்கும் அனுமதி என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் கடும் போராட்டங்கள் நடைபெறுவதைத் தொடர்ந்து பதற்றமான சூழல் எழுந்துள்ளது.

மாதப் பிறப்பு நாளான இன்று கோயில் நடை திறந்து பூஜை நடக்கின்றது. இந் நிலையில், சபரிமலையை நோக்கி பெண்கள் சிலர் வரத் தொடங்கினர். இதனால் எழுந்த பதற்ற நிலை காரணமாக, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். உடன் ஏராளமானபெண் போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சபரிமலை கோயிலுக்கு தரிசனம் செய்தற்காக வந்த பெண், பத்தனந்திட்டாவில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இருப்பினும், பாதுகாப்புக்காக நின்ற போலீஸார், அந்தப் பெண்ணை பத்திரமாக அங்கிருந்து அகற்றி, பத்தனம்திட்டா காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

sabarimala1 - 2026

ஹைதராபாத்தைச் சேர்ந்த மாதவி என்ற 45வயது பெண் ஒருவர் பம்பாவைக் கடந்து சுவாமி ஐயப்பன் சாலையை அடைந்தபோது போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அவர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்!

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

ஆனால், மாதவியைத் தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்கள் வாக்குவாதம் செய்தபோது, மாதவிக்கு பாதுகாப்பு அளித்த போலீஸார், அங்கிருந்து அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப் படுகிறது. இதை அடுத்து 45 வயதுப் பெண் மாதவி முதல் முறையாக சட்ட அங்கீகாரத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்தார் என்ற செய்திகள் பரவின. சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை மாதவி பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் லிபி வழியிலேயே இறக்கி விடப்பட்டதாகவும், பத்தனம்திட்டாவில் பஸ்ஸிலிருந்து அவரை பக்தர்கள் இறக்கி விட்டதாகவும், சபரிமலைக்குச் செல்ல விடாமல் தடுத்து கெரோ செய்தனர் என்றும் தகவல் வெளியானது.

பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், கடும் பதற்ற நிலை எழுந்துள்ளது. ஆனால், சபரிமலைக்கு வரும் பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, கோயில் நடைமுறையையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வெறித்தனத்துடன் கேரள கம்யூனிஸ்ட்களும் மாநில அரசும் ஈடுபட்டு வருவது கேரளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories