சபரிமலை விவகாரத்தில் போராட்டங்களால் கேரளாவில் பதற்றம்! போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதியில் பெண்கள்!

sabarimala2 - 2026

சபரிமலை கோயிலில் எல்லா வயதுப் பெண்களுக்கும் அனுமதி என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் கடும் போராட்டங்கள் நடைபெறுவதைத் தொடர்ந்து பதற்றமான சூழல் எழுந்துள்ளது.

மாதப் பிறப்பு நாளான இன்று கோயில் நடை திறந்து பூஜை நடக்கின்றது. இந் நிலையில், சபரிமலையை நோக்கி பெண்கள் சிலர் வரத் தொடங்கினர். இதனால் எழுந்த பதற்ற நிலை காரணமாக, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். உடன் ஏராளமானபெண் போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சபரிமலை கோயிலுக்கு தரிசனம் செய்தற்காக வந்த பெண், பத்தனந்திட்டாவில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இருப்பினும், பாதுகாப்புக்காக நின்ற போலீஸார், அந்தப் பெண்ணை பத்திரமாக அங்கிருந்து அகற்றி, பத்தனம்திட்டா காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

sabarimala1 - 2026

ஹைதராபாத்தைச் சேர்ந்த மாதவி என்ற 45வயது பெண் ஒருவர் பம்பாவைக் கடந்து சுவாமி ஐயப்பன் சாலையை அடைந்தபோது போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அவர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்!

ஆனால், மாதவியைத் தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்கள் வாக்குவாதம் செய்தபோது, மாதவிக்கு பாதுகாப்பு அளித்த போலீஸார், அங்கிருந்து அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப் படுகிறது. இதை அடுத்து 45 வயதுப் பெண் மாதவி முதல் முறையாக சட்ட அங்கீகாரத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்தார் என்ற செய்திகள் பரவின. சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை மாதவி பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் லிபி வழியிலேயே இறக்கி விடப்பட்டதாகவும், பத்தனம்திட்டாவில் பஸ்ஸிலிருந்து அவரை பக்தர்கள் இறக்கி விட்டதாகவும், சபரிமலைக்குச் செல்ல விடாமல் தடுத்து கெரோ செய்தனர் என்றும் தகவல் வெளியானது.

பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், கடும் பதற்ற நிலை எழுந்துள்ளது. ஆனால், சபரிமலைக்கு வரும் பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, கோயில் நடைமுறையையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வெறித்தனத்துடன் கேரள கம்யூனிஸ்ட்களும் மாநில அரசும் ஈடுபட்டு வருவது கேரளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories