ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமாம்! ஆனா…?! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிச்சிடுச்சி..!

supreme court of india - 2026

புது தில்லி: பட்டாசு வெடிப்பதற்கு எதிராக முழுமையான தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுகள் விற்பனை செய்ய தடையில்லை என்றும், பட்டாசுகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை இல்லை என்றும் கூறிய உச்ச நீதிமன்றம், பட்டாசுகளுக்கு எதிராக முழுமையான தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப் பட்ட மனு மீது தீர்ப்பு அளித்தது. அப்போது, பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க மறுத்ததுடன், பட்டாசு உற்பத்தியை முறைப்படுத்த வேண்டும் என்றும், சுற்றுச் சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

முன்னதாக, கடும் மாசுபாட்டால் அவதிப்படும் தில்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் நீட்டிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் இத்தகையை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய சாராம்சம்…

* பட்டாசு வெடிப்பதன் மூலம் மாசு ஏற்படுத்துகிறது என்றாலும், இதனை நம்பியுள்ள பல ஆயிரம் குடும்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ தடை விதிக்க முடியாது.

* பட்டாசு தயாரிப்பு தொடர்பான விதிகளை இன்னும் முறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

* சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்க கூடாது.

* அதிக சத்தம், அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசு தயாரிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும்.

* தில்லியில் அமலில் இருந்த தடையும் நீக்கப்படுகிறது.

* ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்கப்படுகிறது.

* தீபாவளி உள்ளிட்ட அனைத்து மத விழாக்களுக்கும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.

* கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் இரவு 11.45 முதல் 12.45 வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். தங்களிடம் 2 ஆண்டுகளுக்கு தேவையான பட்டாசுகள் தேங்கிக் கிடப்பதாகவும் நீதிமன்ற உத்தரவால் அவற்றின் விற்பனை முடக்கம் நீங்கியது என்றும் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories