ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமாம்! ஆனா…?! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிச்சிடுச்சி..!

supreme court of india - 2026

புது தில்லி: பட்டாசு வெடிப்பதற்கு எதிராக முழுமையான தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுகள் விற்பனை செய்ய தடையில்லை என்றும், பட்டாசுகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை இல்லை என்றும் கூறிய உச்ச நீதிமன்றம், பட்டாசுகளுக்கு எதிராக முழுமையான தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப் பட்ட மனு மீது தீர்ப்பு அளித்தது. அப்போது, பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க மறுத்ததுடன், பட்டாசு உற்பத்தியை முறைப்படுத்த வேண்டும் என்றும், சுற்றுச் சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

முன்னதாக, கடும் மாசுபாட்டால் அவதிப்படும் தில்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் நீட்டிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் இத்தகையை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய சாராம்சம்…

* பட்டாசு வெடிப்பதன் மூலம் மாசு ஏற்படுத்துகிறது என்றாலும், இதனை நம்பியுள்ள பல ஆயிரம் குடும்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ தடை விதிக்க முடியாது.

* பட்டாசு தயாரிப்பு தொடர்பான விதிகளை இன்னும் முறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

* சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்க கூடாது.

* அதிக சத்தம், அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசு தயாரிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும்.

* தில்லியில் அமலில் இருந்த தடையும் நீக்கப்படுகிறது.

* ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்கப்படுகிறது.

* தீபாவளி உள்ளிட்ட அனைத்து மத விழாக்களுக்கும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.

* கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் இரவு 11.45 முதல் 12.45 வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். தங்களிடம் 2 ஆண்டுகளுக்கு தேவையான பட்டாசுகள் தேங்கிக் கிடப்பதாகவும் நீதிமன்ற உத்தரவால் அவற்றின் விற்பனை முடக்கம் நீங்கியது என்றும் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories