ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமாம்! ஆனா…?! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிச்சிடுச்சி..!

supreme court of india - 2026

புது தில்லி: பட்டாசு வெடிப்பதற்கு எதிராக முழுமையான தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுகள் விற்பனை செய்ய தடையில்லை என்றும், பட்டாசுகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை இல்லை என்றும் கூறிய உச்ச நீதிமன்றம், பட்டாசுகளுக்கு எதிராக முழுமையான தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப் பட்ட மனு மீது தீர்ப்பு அளித்தது. அப்போது, பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க மறுத்ததுடன், பட்டாசு உற்பத்தியை முறைப்படுத்த வேண்டும் என்றும், சுற்றுச் சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

முன்னதாக, கடும் மாசுபாட்டால் அவதிப்படும் தில்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் நீட்டிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் இத்தகையை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய சாராம்சம்…

* பட்டாசு வெடிப்பதன் மூலம் மாசு ஏற்படுத்துகிறது என்றாலும், இதனை நம்பியுள்ள பல ஆயிரம் குடும்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ தடை விதிக்க முடியாது.

* பட்டாசு தயாரிப்பு தொடர்பான விதிகளை இன்னும் முறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

* சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்க கூடாது.

* அதிக சத்தம், அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசு தயாரிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும்.

* தில்லியில் அமலில் இருந்த தடையும் நீக்கப்படுகிறது.

* ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்கப்படுகிறது.

* தீபாவளி உள்ளிட்ட அனைத்து மத விழாக்களுக்கும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.

* கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் இரவு 11.45 முதல் 12.45 வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். தங்களிடம் 2 ஆண்டுகளுக்கு தேவையான பட்டாசுகள் தேங்கிக் கிடப்பதாகவும் நீதிமன்ற உத்தரவால் அவற்றின் விற்பனை முடக்கம் நீங்கியது என்றும் கூறியுள்ளனர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories