சபரிமலைக்குள் புக முயன்ற ரஹானா பாத்திமா… அன்று ஏகப்பட்ட பாதுகாப்பு! இன்று கைது!

rahenafathima - 2026

சபரிமலை செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரஹானா பாத்திமாவை எர்ணாகுளம் போலீசார் கைது செய்தனர். ஃபேஸ்புக்கில் மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படம் பதிவிட்ட வழக்கில் ரஹானா பாத்திமா கைது செய்யப் பட்டுள்ளார்.

சமூகப் போராளியாக சித்தரிக்கப்பட்ட பாத்திமா செவ்வாய்க்கிழமை இன்று காலை பத்தனம்திட்டா போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் சபரிமலைக்கு செல்வதற்காக போலீசாரின் துணையுடன் பம்பையில் இருந்து மலை ஏறினார் பாத்திமா.

ரெஹானா பாத்திமா அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக ஐயப்ப பக்தர்கள் மன உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாக புகார்கள் எழுப்பப்பட்டன

இந்நிலையில் கொச்சியில் இருந்து பத்தனம்திட்டா போலீசாரால் ரெஹானா பாத்திமா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், பத்தனம்திட்டா டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார்.

அக்டோபர் மாதம் 22ஆம் தேதி பத்தனம்திட்டா போலீசார் பாத்திமா மீது ஒரு வழக்கு பதிவு செய்தனர். அதில் இருவேறு சமூகங்களுக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டதாக புகார் பதியப்பட்டது. அதில் பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு செய்த புகைப்படங்கள் பல்வேறு நபர்களின் புகார்களுக்கு உள்ளானது.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் ஐயப்ப பக்தர் போன்று இவர் கறுப்பு நிற உடை அணிந்து ருத்திராட்ச மாலை அணிந்து தத்துவமசி என்று சொல்லக் கூடிய முத்திரை காட்டி அமர்ந்திருந்தார். இந்தப் படம் ஐயப்ப பக்தர்களை பெரிதும் புண்படுத்துவதாக அமைந்திருந்தது

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. சபரிமலை சம்ரக்ஷண சமிதி தங்களது மத உணர்வுகளை புண்படுத்துவதாக பாத்திமா மீது புகார் கொடுத்து இருந்தது. இந்த புகார் பத்தனம்திட்டா மாவட்ட காவல் அதிகாரியிடம் நேரடியாக அளிக்கப்பட்டது என்று சபரிமலா சம்ரக்ஷண சமிதி செயலாளர் பத்மகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐபிசி செக்சன் 295 ஏ பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டது மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் மற்ற மதத்தினர் மீது துவேஷம் உண்டாக்கும் விதமாகவும் அமைந்திருந்தது என்ற பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டது என்று பத்தனம்திட்டா காவல் அதிகாரி சுனில்குமார் கூறினார்.

இதை அடுத்து, அக்டோபர் 30ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த முன்ஜாமின் மனுவை நவம்பர் மாதம் 16ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் கேரள போலீசார் இது குறித்து விசாரித்து அறிய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பாத்திமா மீண்டுமொருமுறை தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார் அவர் தன்னுடன் 6 பெண்களை அழைத்துக்கொண்டு சபரிமலை சன்னிதானத்துக்கு செல்ல முயன்றார். அந்த நேரத்தில் பேனாவுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். சபரிமலை சந்நிதானத்தில் உள்ள நடப்பந்தல் வரையில் அவரை அழைத்துக் கொண்டு வந்தனர். ஆனால், சபரிமலை சன்னிதானத்துக்கு அரை கிலோமீட்டர் முன்னதாக அவர் நிறுத்தப்பட்டார்

அப்போது அவர் ஐயப்ப பக்தர்களைப் போன்று கருப்பு நிற உடை அணிந்து இருமுடி வைத்திருந்தார். ஆனால், அந்த இருமுடி குறித்து பலத்த சர்ச்சைகள் எழுந்தன.  பல்வேறு சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய விதத்தில் ஊடகங்களில் பெயர் அடிபடும் நடிகையாக உருவெடுத்த பாத்திமா பிஎஸ்என்எல் பணியாளராக இருந்தார். இந்நிலையில் பிஎஸ்என்எல் அவரை ரவிபுரம் பகுதிக்கு பணி மாற்றம் செய்து உத்தரவிட்டு இருந்தது

தங்கள் வாடிக்கையாளர்கள் பலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்கள் பகுதியில் அவர் பணியாற்ற அமர்ந்தால் பிரச்சினைகள் ஏற்படும் என்று கருதி அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்று பிஎஸ்என்எல் குறிப்பிட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories