December 5, 2025, 10:37 PM
26.6 C
Chennai

இந்தியாவுடனான டெஸ்ட்: 3ம் நாள் முடிவில் ஆஸி.132/4

australia ind test - 2025

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலியா 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 326 ரன் எடுத்தது. தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 43 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலியும், அஜிங்கியா ரகானாவும் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்திலேயே ரகானே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி மட்டும் பொறுப்புடன் ஆடி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 25ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.

123 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியை, கம்மின்ஸ் அவுட்டாக்கினார். இதை அடுத்து விளையாடிய ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் ஆகியோர் ஓரளவு மட்டுமே தாக்குப்பிடித்தனர். லியானின் ((Lyon)) பந்துவீச்சில் விக்கெட்டுகள் மளமளவென சரியவே, 283 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.

அபாரமாக பந்துவீசிய லியான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 283 ரன்களில் ஆட்டமிழந்ததால், முதல் இன்னிங்சில் இந்திய அணி 43 ரன்கள் பின் தங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது.

இதில், ஹாரிஸ் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஆரூன் பின்ச் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். ஷான் மார்ஷ் 5 ரன்னும் பீட்டர் ஹாண்ட்கோம்ப் 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவஜா 41 ரன்னுடனும், டிம் பைனி 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories