அம்பலமாகிவிட்டது… அண்டப் புளுகு ஆகாசப் புளுகு..! ஆவேசப்படும் ஜேட்லி!

Published:

02 July25 Arun Jetly - 2026

எதிர்க்கட்சிகளின் பொய் இப்போது அம்பலமாகிவிட்டது என்று கூறியிருக்கிறார் அருண் ஜேட்லி!

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாஜக ஊழல் செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுலும் குற்றம்சாட்டி வரும் நிலையில், மற்ற எதிர்க்கட்சிகளும் ராகுலுடன் சேர்ந்து மோடியை வசைபாடக் கிடைத்த வாய்ப்பாக அதை பயன்படுத்தின. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அனில் அம்பானிக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டதாக ராகுல் பகிரங்கமாகக் கூறிவந்தார்.

மேலும், காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த விலையை விட, அதிக விலைக்கு பாஜக ஒப்பந்தம் செய்தது என்றும், காங்கிரஸ் வாங்க நினைத்த விமானங்களின் எண்ணிக்கையை விட குறைவான ரபேல் விமானங்களை வாங்கியுள்ளதாகவும் ராகுல் கூறி வந்தார். இந்தச் சூழலில் தான் சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப் பட்ட ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையில், காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த தொகையை விட 2.8% குறைவான தொகையிலேயே ரபேல் விமானங்களை மோடி தலைமையிலான அரசு வாங்கியுள்ளதாகவும், இதனால் எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலமாகி இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சத்யமேவ ஜயதே.. வாய்மையே வெல்லும்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் தொடர்ச்சியாக பொய் கூறி வந்தவர்களை, ஜனநாயகம் எவ்வாறு தண்டிக்கப் போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரபேல் விமானங்களை வாங்க 2007ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது, 2016ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒப்பந்தத்தில் குறைந்த விலை, வேகமாக விநியோகம், சிறந்த பராமரிப்பு போன்ற அம்சங்கள் இருக்கின்றன என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img