December 6, 2025, 12:04 AM
26 C
Chennai

பாகிஸ்தான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்!: மனம் குமுறிய மோடி!

modi open - 2025

பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  மேலும்,  பாகிஸ்தான் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று கூறினார் பிரதமர் மோடி.

பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தி இருத்கக்கூடாது. இந்தச் செயலுக்கு உரிய தண்டனை கண்டிப்பாக கொடுக்கப்படும்.  பாகிஸ்தான் மிகப்பெரிய தவறை செய்துள்ளது. சதி செய்து இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தானின் கனவு ஒருபோதும் நனவாகாது. இந்தியாவின் நிலைத்தன்மையை இதுபோன்ற தாக்குதல்கள் பாதிக்காது. பயங்கரவாதிகளின் தாக்குதலைப்பார்த்து இந்தியா உறைந்துபோய்விடாது… என்று கூறினார்.

தில்லியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இதன் பின்னர் விழாவில் பேசிய மோடி, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது அஞ்சலி. ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் வீரத்தின் மீதும், துணிச்சல் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சக்திகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இந்தச் சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக நாடு ஒன்றாக நிற்கிறது. மக்கள் தற்போது மிகவும் கோபமாக உள்ளனர். இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் ரத்தமும் கொதித்து போய் உள்ளது.

இந்தச் செயலுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும். பாகிஸ்தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது. இதற்கு மிகப் பெரிய விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டியிருக்கும். இனி பாகிஸ்தான் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியே அடையும். இந்தியாவின் நிலைத்தன்மையை இது போன்ற தாக்குதல்கள் பாதிக்காது.

எதிர்க்கட்சிகள் இந்தத் தாக்குதலை அரசியல் ஆக்க வேண்டாம். வேற்றுமையை மறந்து பயங்கரவாதிகளை ஒற்றுமையாக இருந்து எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. சதி செய்து இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தானின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories