மறக்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: கோபத்தில் பொங்கும் பொதுமக்கள்!

pakistan terror funding3 - 2026

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப் பட்ட மனிதத்தன்மையற்ற கொடூரத் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்திய மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் ‌2,500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்று கொண்டிருந்த போது, ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அவர்கள் விடுப்பில் சொந்த ஊர் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் தங்கள் பணியில் சேர வந்த வீரர்கள். அவர்கள் மீது நடத்தப் பட்ட இந்தத் தாக்குதல் அவர்களின் குடும்பங்களை சொல்லவொண்ணா துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சுமார் 350 கிலோ வெடிபொருட்களை கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். பலருக்கு கை, கால்கள், உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தின் தூத்துக்குடி, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக சி.ஆர்.பி.எப் அறிவித்துள்ளது.

jem terrorist - 2026

இந்தக் கொடுரத் தாக்குதலுக்கு இந்திய மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். மதத்தின் பெயரால் நிகழ்த்தப் பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தாக்குதலுக்கு மறக்க இயலாத அளவுக்கு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

அதிகம் உணர்ச்சி வசப்படும் சமூக வலைத்தளங்களில் இந்தக் கருத்துகள் பலமாக எதிரொலிக்கின்றன. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை விட்டு விடவே கூடாது. மனிதத்தன்மையற்ற வகையில் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டு, மதத்தில் பெயரால் சுவர்க்கம் செல்வேன் என்று ஒருவன் பகிரங்கமாக குரல் கொடுக்கிறான் என்றால் அதை வேரோடி கிள்ளி எறியவேண்டும்! இந்திய ராணுவம் முழு மூச்சுடன் களத்தில் இறங்க வேண்டும் என்று தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டி வருகின்றனர். உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

masood azhar - 2026
பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ மொஹம்மத் என்ற பயங்கரவாத அமைப்புக்கும் அதன் தலைவன் மசூத் அசாருக்கும், இந்தத் தாக்குதலில் தான் சொர்க்கம் போவேன் என்று சொல்லி இந்தப் பாதகச் செயலைச் செய்த அடில் அஹமதுக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீவிரவாதக் கூட்டத்தை விடக்கூடாது, இவர்களுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து, அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறி வருகின்றனர்!

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

இதனிடையே, இந்தத் தாக்குதலைக் கண்டித்து இன்று காஷ்மீரில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனால், காஷ்மீரில் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் இணையதள சேவைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories