மறக்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: கோபத்தில் பொங்கும் பொதுமக்கள்!

pakistan terror funding3 - 2026

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப் பட்ட மனிதத்தன்மையற்ற கொடூரத் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்திய மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் ‌2,500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்று கொண்டிருந்த போது, ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அவர்கள் விடுப்பில் சொந்த ஊர் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் தங்கள் பணியில் சேர வந்த வீரர்கள். அவர்கள் மீது நடத்தப் பட்ட இந்தத் தாக்குதல் அவர்களின் குடும்பங்களை சொல்லவொண்ணா துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சுமார் 350 கிலோ வெடிபொருட்களை கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். பலருக்கு கை, கால்கள், உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தின் தூத்துக்குடி, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக சி.ஆர்.பி.எப் அறிவித்துள்ளது.

jem terrorist - 2026

இந்தக் கொடுரத் தாக்குதலுக்கு இந்திய மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். மதத்தின் பெயரால் நிகழ்த்தப் பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தாக்குதலுக்கு மறக்க இயலாத அளவுக்கு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர்.

அதிகம் உணர்ச்சி வசப்படும் சமூக வலைத்தளங்களில் இந்தக் கருத்துகள் பலமாக எதிரொலிக்கின்றன. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை விட்டு விடவே கூடாது. மனிதத்தன்மையற்ற வகையில் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டு, மதத்தில் பெயரால் சுவர்க்கம் செல்வேன் என்று ஒருவன் பகிரங்கமாக குரல் கொடுக்கிறான் என்றால் அதை வேரோடி கிள்ளி எறியவேண்டும்! இந்திய ராணுவம் முழு மூச்சுடன் களத்தில் இறங்க வேண்டும் என்று தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டி வருகின்றனர். உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

masood azhar - 2026
பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ மொஹம்மத் என்ற பயங்கரவாத அமைப்புக்கும் அதன் தலைவன் மசூத் அசாருக்கும், இந்தத் தாக்குதலில் தான் சொர்க்கம் போவேன் என்று சொல்லி இந்தப் பாதகச் செயலைச் செய்த அடில் அஹமதுக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீவிரவாதக் கூட்டத்தை விடக்கூடாது, இவர்களுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து, அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறி வருகின்றனர்!

இதனிடையே, இந்தத் தாக்குதலைக் கண்டித்து இன்று காஷ்மீரில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனால், காஷ்மீரில் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் இணையதள சேவைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories