பாகிஸ்தான் தூதரகத்தை மூடிவிட்டு பலுசிஸ்தான் தூதரகத்தை திறக்கவும்! : சுப்பிரமணியன் சுவாமி யோசனை!

subramanian swami4 - 2026இன்றே பாகிஸ்தான் தூதரகத்தை மூடிவிடவும் என்று யோசனை கூறியுள்ளார் பாஜக., மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை நேற்று மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் வெடிக்கச் செய்தார்.

இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட சிஆர்பிஎப் வீரர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். படுகாயமடைந்த 38 சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாஜக., மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி டிவிட்டர் பதிவுகளில் வரிசையாக தனது கருத்துகளைப் பதிவுசெய்து வந்தார்.

பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை துண்டிக்க வேண்டும் என்று வெகுநாட்களாக கோரிக்கை வைத்தவர் சு.சுவாமி. மேலும், பாகிஸ்தானுக்கான தாராள வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை நீக்கிவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அவரது கோரிக்கையை, இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர்தான் மத்திய அரசு செவிமடுத்து அறிவித்துள்ளது.

நாடு பேசுகிறது. பழிவாங்கலுக்கு அல்ல, பதிலடி கொடுக்க! ஒன்றுக்கு ஒன்றாக அல்ல, எதிர்கால நலன் கருதி ஒட்டுமொத்தமாக!  இப்போது நாம் வேறு வகையில் சிந்திக்க வேண்டும். தில்லியில் பலுசிஸ்தான் தூதரகத்தைத் திறக்கவேண்டும்! பாகிஸ்தான் தூதரகத்தை மூடிவிடுங்கள்! என்று கூறியுள்ளார் சுவாமி.

மேலும், வர்த்தக நாட்டுக்கான அந்தஸ்தை திரும்பப் பெற்றுள்ளீர்கள் நன்றி. இப்போது பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்று இந்தியா அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்! இப்போதே இப்போதே… இப்போதே! நாளை அல்ல! இன்று! என்று கூறி ஒரு கருத்தை ரிடிவீட் செய்து, அதை பலருக்கும் டேக் செய்திருக்கிறார் சுவாமி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories