பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் தொடங்கி நாடு முழுதும் ஆர்ப்பாட்டம்!

Published:

protest against kashmir incident - 2026

புது தில்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஜெய்ஸ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, காஷ்மீரின் கத்துவா பகுதியில் உள்ளூர் மக்கள், மாணவர்கள், பல்வேறு
அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்கள் தங்கள் கைகளில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி சாலையில் அமர்ந்து போராடினர். மேலும், பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி, தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் பாகிஸ்தான் அரசைக் கண்டித்தும், ஜெய்ஸ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும் உள்ளூர் மக்கள் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

மேலும் பாகிஸ்தான் தேசியக் கொடி, ஜெய்ஸ் இ மொஹம்மத் இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார் உருவபொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்தனர்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இதேபோல், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், தெலங்கானா மாநில உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img