February 22, 2026, 7:15 AM
25.4 C
Chennai

பிறந்த குழந்தைக்கு அபிநந்தனின் பெயரைச் சூட்டிய ராஜஸ்தான் தம்பதி!

abinandan - 2026

பாகிஸ்தானில் இருந்து விடுதலையாகி நேற்று இந்தியா திரும்பிய விமானி அபிநந்தனுக்கு மரியாதை அளிக்கும் பொருட்டு, வெள்ளிக்கிழமை நேற்று பிறந்த ஆண் குழந்தைக்கு அபிநந்தனின் பெயரை வைத்தனர் ராஜஸ்தான் தம்பதியர். இந்தச் செய்தி வெளியானதும், பலரும் அந்தத் தம்பதிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் நிகல்பூர் மற்றும் சங்கனேர் பகுதிகளில் பிறந்த 2 குழந்தைகளுக்கு பாகிஸ்தான் படையினரால், சிறை பிடிக்கப்பட்டு, பின் விடுதலையான இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வீரர் அபிநந்தனைப் போன்று எங்கள் குழந்தையும் பெரிய அளவில் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பர் என்று அக் குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர்.

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள கிஷான்கர் பகுதியில் நேற்று மாலை பிறந்த குழந்தைக்கு அபிநந்தனின் பெயர் சூட்டப்பட்டது. இதுகுறித்து குழந்தையின் தாத்தா ஜனேஷ் பூட்டானி தெரிவிக்கையில், ”நேற்று மாலை எங்கள் மருமகள் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். நம் விமானி அபிநந்தனை கௌரவப்படுத்தும் விதமாக அவரின் பெயரை வைத்துள்ளோம். அபிநந்தனை எண்ணிப் பெருமை கொள்கிறோம். அபிநந்தனை விடுதலை செய்வது தொடர்பான செய்திகளை செய்தி சேனல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது அறிந்து கொண்டோம். அப்போது என் மருமகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பின்னர் நல்லபடியாக பிரசவம் ஆனது” என்றார்.

இது குறித்து குழந்தையின் தாய் சப்னாதேவி தெரிவித்த போது, ”அபிநந்தன் என என் மகனை நான் அழைக்கும் போதெல்லாம், விமானி அபிநந்தனின் வீரச் செயல்களைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருப்போம். என் மகன் வளர்ந்து பெரியவனாகும்போது, அவரைப் போன்ற துணிச்சல் மிக்க வீரனாக மாற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்” என்றார்

abhinandan1 - 2026

முன்னதாக, பாகிஸ்தானில் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த போது, அவரிடம் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும், தேசப் பாதுகாப்பைக் காட்டிக் கொடுக்காமல் வெகு சகஜமாகவும் வீரமாகவும் சமயோஜிதமாகவும் அவர் பேசிய பேச்சுக்களும் பாகிஸ்தான் ராணுவத்தினர் வெளியிட்ட வீடியோவில் வெளிப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் தங்களது உபசரிப்பு முறை, எதிரி வீரரைத் தொல்லைப் படுத்தாமல் கௌரவமாக நடத்தும் முறை இவற்றை வெளி உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த வீடியோக்களை வெளியில் உலவ விட்டனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, வீரர் அபிநந்தன் இந்தியாவில் பெரும் ஹீரோ ஆகி விட்டார்.

அபிநந்தனின் துணிச்சலும் தைரியமும் இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயம் ஆனது. இந்தியர்கள் அபிநந்தனை ஒரு ஹீரோவாகவே பார்த்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories