ரபேல் ஆவணங்கள் திருடப் படவில்லை; திருட்டுத் தனமாக நகலெடுக்கப் பட்டுள்ளன!

KKVenugopal ag - 2026

புதுதில்லி: ”ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்படவில்லை; அவற்றின் நகல்களை மனுதாரர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேற்று அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.

ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை மார்ச் 7 வியாழன் அன்று நடைபெற்ற போது, விசாரணையில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டு அவை நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை அடுத்து, வழக்கம் போல் எதிர்க் கட்சிகளும் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தன.

வழக்கு ஆவணங்கல் திருடப்பட்டன என்றால் இது குறித்து உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல், மாயாவதி, மம்தா பானர்ஜி, ஷரத் பவார் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தாம் அளித்த பதில் குறித்து விளக்கம் அளித்துள்ள கே.கே. வேணுகோபால், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடு போகவில்லை.

யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்துள்ளது ஒப்பந்த ஆவணத்தின் அசல் பிரதிகளின் நகல்களாகும். அரசு ஆவணங்களை போட்டோ எடுத்து வெளியிட்டதாகவே நான் குற்றம்சாட்டி இருந்தேன். அவற்றைத்தான் அவ்வாறு திருட்டுத்தனமாக அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டேன்.

உச்ச நீதிமன்றத்தில் எனது வாதத்தில் நான் குறிப்பிட்டதை எதிர்க்கட்சிகள் தவறாகப் புரிந்து கொண்டு, பாதுகாப்பு அமைச்சகம் வசம் இருந்த ஆவணங்கள் திருடு போய் விட்டதாகக் கூறி வருகின்றன.

ஆவணங்கள் திருடு போய் விட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு! ஆவணங்களைக் கள்ளத்தனமாகப் பிரதி எடுத்திருக்கிறார்கள்” என்றார்.

இந்நிலையில், இந்த ஆவணங்கள் ஏற்கெனவே தி ஹிந்து பத்திரிகையில் வெளியிடப் பட்டதால், அதுவும் இப்போது சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories