பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை: பிரதமர் மோடி உறுதியான பேச்சு!

modi in kanyakumari - 2026

இந்திய மண்ணில் பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை; பயங்கரவாதிகளை எதிர்கொள்ள புதிய கொள்கையை இந்தியா கடைபிடித்து வருகிறது என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி.

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் 2008 ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, பதிலடி கொடுத்திருக்க வேண்டும்!

இந்தியாவில் முன்பு நிகழ்ந்த குண்டுவெடிப்பு, மற்றும் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு இருந்த போதும், முந்தைய காங்கிரஸ் அரசு என்ன செய்தது?. உள்துறை அமைச்சரை மட்டுமே காங்கிரஸ் அரசு அப்போது மாற்றியது!

இத்தகைய சூழ்நிலையில், உள்துறை அமைச்சரை மாற்ற வேண்டுமா அல்லது கொள்கையை மாற்ற வேண்டுமா? நாங்கள் கொள்கையை மாற்றினோம்!

யூரி தாக்குதலுக்குப் பின் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதலைப் போன்று இந்தியா பதிலடி கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் முன்னேற்பாடுகளுடன் எல்லையில் படைகளைக் குவித்து தயார் நிலையில் வைத்திருந்தது. ஆனால் இந்த முறை விமானப் படை மூலம் பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அதிகாலை 3.30க்கு நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானின் தூக்கம் தொலைந்து போனது.

சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்ட பின், நாட்டு மக்களுக்கு அதைப் பற்றி தெரிவித்தோம். ஆனால் பாலகோட் தாக்குதலுக்குப் பின் எந்த அறிவிப்பும் செய்யாமல் அமைதியாக நிலைமையை கண்காணித்தபடி இருந்தோம். ஆனால் அதிகாலை 5 மணிக்கே மோடி தங்களை தாக்கி விட்டதாக பாகிஸ்தான் டுவிட்டரில் அழத் தொடங்கி விட்டது.

இந்தியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் பதிலடி எதுவும் தரமாட்டார்கள் என்று அவர்கள் கருதினர்.

எதிரிகளின் இந்த எண்ணத்திற்கு காரணம் 2014 ஆம் ஆண்டுக்கு முன் ஆட்சியில் இருந்த ரிமோட் கன்ட்ரோல் அரசாங்கம்தான்!

இந்தியாவின் கடுமையான தாக்குதலுக்குப் பின் பயங்கரவாதிகள் பீதியில் உள்ளனர். ஆனால் இந்தியப் படையினர் நடத்திய தாக்குதல் குறித்து சிலர் சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்புகின்றனர்,

இந்திய மண்ணில் விளைந்ததை சாப்பிட்டுக் கொண்டு, பாகிஸ்தானுக்கு உதவும் விதத்தில் அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியனின் ரத்தம் தான் அவர்களது உடலில் ஓடுகிறது என்பதில் சந்தேகம் உள்ளது போலும்! என்று பேசினார் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories