ரயில்வே பணிகளில் முறைகேடா? உண்மை என்ன?

rrb - 2026

மதிப்பெண்களில் முறைகேடு செய்து வடஇந்தியர்கள் ரயில்வே வேலைக்கு வருகிறார்கள் என்று ஒரு பிராது வைக்கப்படுகிறது. அதில் இருக்கும் உண்மைத் தன்மையை ஆராயாமல் எல்லோருமே அவரவர் பங்குக்கு பொங்கல் வைக்கிறார்கள்.

எனக்கு கூட ஆட்சேபம் இருக்கிறது அளவில் அதிகமாக வெளி மாநிலத்தவர்கள் ரயில்வே வேலையில் தேர்வாகி இங்கு வருகிறார்கள் என.

ஆனால் அவன் தேர்ச்சி பெற உரிய வேலையை செய்கிறான்.

செகந்திராபாத்தில், பாட்னாவில், ஜோத்பூரில் பெரிய பெரிய கல்வி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் ரயில்வே வேலைக்கென தயாராகும் மாணவர்களை பயிற்றுவிக்கின்றன.

மாணவர்களும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஐடிஐயில் படித்து ரயில்வே பணி பயிற்சி நிலையங்களில் தங்கி மாசக்கணக்கில் படித்து தேர்வெழுத வருகிறான்.

அலட்சியமே லட்சியமென இருக்கும் நம்ம ஊர்ப்பையன் பணிக்கு விண்ணப்பம் போடுகிறான். ஹால்டிக்கெட் வந்ததும் பரிட்சை எழுத போய்விடுகிறான். வீட்டில் திட்டுகிறார்களே என்று கடமைக்கு எந்த சிலபஸிலும் ஒத்துப் போகாத ஒரு புத்தகத்தை வாங்கி படிக்கிற மாதிரி பாவ்லா காட்டுகிறான்.

பிறகு பெருவாரியா அவன் தான் தேர்வாவான், நம்மாளு எப்படி அவனுடன் மோதி ஜெயிப்பது. அலட்சியம் மட்டும் காரணமில்லை. வடமாநிலங்களை ஒப்பிடும் போது நாம சீக்கிரம் முன்னேறியதும் முக்கியமான காரணம்.

ஐடிஐயில் ரயில்வேக்கென அதிக வாய்ப்புள்ள ட்ரேட்கள் இரண்டு தான் தான், கார்ப்பெண்டர், பெயிண்டர். இதன் பிறகு வெல்டர், பிட்டர், எலட்ரிசியன் வரும்.

ஆனா நம்மாளு பத்தாவதில் குறைச்சலா மார்க் எடுத்து ஐடிஐயில் சேர வரும் போது தீண்டத்தகாததாக ஒதுக்கும் ட்ரேட்கள் கார்ப்பெண்ட்டரும், பெயிண்டரும் தான். கேட்டால் எவனாவது இரண்டு வருடம் இந்த பிரிவை படிப்பா எடுத்து படிப்பானானு சொல்வான்.

அவனைப் பொறுத்தவரைக்கும் அப்படி பெயிண்டர் படிச்சா வீட்டுக்கு தான் சுண்ணாம்படிக்கனும்னு தோணும், இதுக்கு எதுக்கு படிக்கனும்னு கேப்பான். கார்ப்பெண்டரும் இந்த நிலை தான்.

ஆனால் மேற்கு வங்காளத்திலும் பீகாரிலும் நிறைய கல்வி நிறுவனங்கள் இதைப் பற்றிய விழிப்புணர்வை படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தி அவர்களை படிக்க வைக்கிறது. போட்டி மிகக் குறைவாக இருக்கும் ட்ரேட்டில் சுமாரா எழுதினாலே பாசாகலாம். ஆனால் இவன் தான் பயிற்சி நிலையத்தில் பக்காவா தயாராகி வருகிறானே. வந்து பாஸாகி வேலைக்கு வந்து விடுகிறான்.

முக்கியமான விஷயம் ரயில்வேயில் மூன்று வகையில் தான் வேலைக்கு வர முடியும்.

ஒன்னு ஆர்ஆர்பி மூலம் தேர்வாவது.

இரண்டு வாரிசுதாரர் உரிமையில் வேலைக்கு வருவது.

மூன்றாவது பங்களா ப்யூன் எனப்படும் பெரிய ஐஆர்எஸ் ஆபீசர் வீட்டில் எடுபிடியாக வேலை தொடங்கி மூன்று வருடம் கழித்து பணி நிரந்தரம் பெற்று தொழிற்சாலைகளுக்கு இடம் மாறுவது.

பங்களா பியூன் வருடத்திற்கு நூறு இருக்கலாம். அதில் சில இடங்களில், கவனிக்க, சொற்பமாக தான் பணம் விளையாட வாய்ப்பிருக்கிறது.

இரண்டாவதான வாரிசுதாரர் வேலையில் முறைகேடு பண்ணவே முடியாது.

ஆர்ஆர்பி மூலம் நேரடி தேர்வாவதில் முறைகேடு நடக்க வாய்ப்பே கிடையாது. அதில் அவ்வளவு கெடுபிடியான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. விடை திருத்துபவனுக்கு எந்த சூழலிலும் மாணவனின் பெயரோ ரோல் நம்பரோ தெரிய வாய்ப்பே இல்லை.

எனவே தேவையில்லாமல் குறை சொல்வதை விட்டு விட்டு பரிட்சைக்கு நம் பிள்ளைகளை தயார் செய்து முறையான பயிற்சி நிலையங்களில் பயிற்றுவித்து தேர்வுக்கு அனுப்பி தேர்ச்சி பெறும் வேலையை பார்ப்போம்…

  • வாசகன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Topics

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

Entertainment News

Popular Categories