December 6, 2025, 9:08 PM
25.6 C
Chennai

ரயில்வே பணிகளில் முறைகேடா? உண்மை என்ன?

rrb - 2025

மதிப்பெண்களில் முறைகேடு செய்து வடஇந்தியர்கள் ரயில்வே வேலைக்கு வருகிறார்கள் என்று ஒரு பிராது வைக்கப்படுகிறது. அதில் இருக்கும் உண்மைத் தன்மையை ஆராயாமல் எல்லோருமே அவரவர் பங்குக்கு பொங்கல் வைக்கிறார்கள்.

எனக்கு கூட ஆட்சேபம் இருக்கிறது அளவில் அதிகமாக வெளி மாநிலத்தவர்கள் ரயில்வே வேலையில் தேர்வாகி இங்கு வருகிறார்கள் என.

ஆனால் அவன் தேர்ச்சி பெற உரிய வேலையை செய்கிறான்.

செகந்திராபாத்தில், பாட்னாவில், ஜோத்பூரில் பெரிய பெரிய கல்வி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் ரயில்வே வேலைக்கென தயாராகும் மாணவர்களை பயிற்றுவிக்கின்றன.

மாணவர்களும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஐடிஐயில் படித்து ரயில்வே பணி பயிற்சி நிலையங்களில் தங்கி மாசக்கணக்கில் படித்து தேர்வெழுத வருகிறான்.

அலட்சியமே லட்சியமென இருக்கும் நம்ம ஊர்ப்பையன் பணிக்கு விண்ணப்பம் போடுகிறான். ஹால்டிக்கெட் வந்ததும் பரிட்சை எழுத போய்விடுகிறான். வீட்டில் திட்டுகிறார்களே என்று கடமைக்கு எந்த சிலபஸிலும் ஒத்துப் போகாத ஒரு புத்தகத்தை வாங்கி படிக்கிற மாதிரி பாவ்லா காட்டுகிறான்.

பிறகு பெருவாரியா அவன் தான் தேர்வாவான், நம்மாளு எப்படி அவனுடன் மோதி ஜெயிப்பது. அலட்சியம் மட்டும் காரணமில்லை. வடமாநிலங்களை ஒப்பிடும் போது நாம சீக்கிரம் முன்னேறியதும் முக்கியமான காரணம்.

ஐடிஐயில் ரயில்வேக்கென அதிக வாய்ப்புள்ள ட்ரேட்கள் இரண்டு தான் தான், கார்ப்பெண்டர், பெயிண்டர். இதன் பிறகு வெல்டர், பிட்டர், எலட்ரிசியன் வரும்.

ஆனா நம்மாளு பத்தாவதில் குறைச்சலா மார்க் எடுத்து ஐடிஐயில் சேர வரும் போது தீண்டத்தகாததாக ஒதுக்கும் ட்ரேட்கள் கார்ப்பெண்ட்டரும், பெயிண்டரும் தான். கேட்டால் எவனாவது இரண்டு வருடம் இந்த பிரிவை படிப்பா எடுத்து படிப்பானானு சொல்வான்.

அவனைப் பொறுத்தவரைக்கும் அப்படி பெயிண்டர் படிச்சா வீட்டுக்கு தான் சுண்ணாம்படிக்கனும்னு தோணும், இதுக்கு எதுக்கு படிக்கனும்னு கேப்பான். கார்ப்பெண்டரும் இந்த நிலை தான்.

ஆனால் மேற்கு வங்காளத்திலும் பீகாரிலும் நிறைய கல்வி நிறுவனங்கள் இதைப் பற்றிய விழிப்புணர்வை படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தி அவர்களை படிக்க வைக்கிறது. போட்டி மிகக் குறைவாக இருக்கும் ட்ரேட்டில் சுமாரா எழுதினாலே பாசாகலாம். ஆனால் இவன் தான் பயிற்சி நிலையத்தில் பக்காவா தயாராகி வருகிறானே. வந்து பாஸாகி வேலைக்கு வந்து விடுகிறான்.

முக்கியமான விஷயம் ரயில்வேயில் மூன்று வகையில் தான் வேலைக்கு வர முடியும்.

ஒன்னு ஆர்ஆர்பி மூலம் தேர்வாவது.

இரண்டு வாரிசுதாரர் உரிமையில் வேலைக்கு வருவது.

மூன்றாவது பங்களா ப்யூன் எனப்படும் பெரிய ஐஆர்எஸ் ஆபீசர் வீட்டில் எடுபிடியாக வேலை தொடங்கி மூன்று வருடம் கழித்து பணி நிரந்தரம் பெற்று தொழிற்சாலைகளுக்கு இடம் மாறுவது.

பங்களா பியூன் வருடத்திற்கு நூறு இருக்கலாம். அதில் சில இடங்களில், கவனிக்க, சொற்பமாக தான் பணம் விளையாட வாய்ப்பிருக்கிறது.

இரண்டாவதான வாரிசுதாரர் வேலையில் முறைகேடு பண்ணவே முடியாது.

ஆர்ஆர்பி மூலம் நேரடி தேர்வாவதில் முறைகேடு நடக்க வாய்ப்பே கிடையாது. அதில் அவ்வளவு கெடுபிடியான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. விடை திருத்துபவனுக்கு எந்த சூழலிலும் மாணவனின் பெயரோ ரோல் நம்பரோ தெரிய வாய்ப்பே இல்லை.

எனவே தேவையில்லாமல் குறை சொல்வதை விட்டு விட்டு பரிட்சைக்கு நம் பிள்ளைகளை தயார் செய்து முறையான பயிற்சி நிலையங்களில் பயிற்றுவித்து தேர்வுக்கு அனுப்பி தேர்ச்சி பெறும் வேலையை பார்ப்போம்…

  • வாசகன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories