30 செயற்கைக் கோள்களுடன் ஏப்.1ல் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி- சி45 ராக்கெட்!

isro gslv gsat 6a - 2026

பிஎஸ்எல்வி சி – 45 ராக்கெட் மூலம் எமிசாட் உள்ளிட்ட 30 செயற்கைக்கோள்கள் ஏப்.1-ல் விண்ணில் ஏவப்படவுள்ளன. இவை 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப் படவுள்ளன என்பது சிறப்பம்சம்.

நாட்டின் முக்கியத் தேவையான தொலைத்தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

தற்போது, ‘எமிசாட்’ என்ற நவீன மின்னணு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி – 45 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து வரும் ஏப்ரல் 1-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக் கட்ட பணிகள் இப்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. எமிசாட் செயற்கைக்கோள் 420 கிலோ எடை கொண்டது. நமது ராணுவத்தின் உளவுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். உள்நாட்டு டிஆர்டிஓ மையத்தின் (Defence Research and Development Organization) நேரடிகட்டுப்பாட்டில் இது இயங்கும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

பிஎஸ்எல்வி ஏவுதலில் எமிசாட்டுடன் வணிக ரீதியாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 28 சிறிய வகையான செயற்கைக் கோள்களும், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஎஸ்டி) தயாரித்த சிறிய நானோ செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப் படவுள்ளன.

இந்த செயற்கைக் கோள்கள் எல்லாம், உலகிலேயே முதல் முறையாக 3 வெவ்வேறு சுற்று வட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட உள்ளன என்பது இதன் சிறப்பம்சம்.  அதன்படி பிஎஸ்எல்வி ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்டு 763 கி.மீ,. தொலைவை அடைந்ததும் எமிசாட்டும், தொடர்ந்து 504 கிமீ தொலைவில் 250 கிலோ எடையுடைய 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்படும்.

அதன் பின்னர் ராக்கெட் இறுதி நிலையான பிஎஸ் 4 இயந்திரம் படிப்படியாக உந்தித் தள்ளப்பட்டு, சோதனை முயற்சியில் அதில் வைக்கப்பட்டுள்ள நானோ செயற்கைக் கோள் 485 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

வழக்கத்துக்கு மாறாக இந்த முறை பிஎஸ் 4, சூரிய மின்தகடுகள் (சோலார் பேனல்கள்) மூலம் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • For the first time in the country’s space history, Indian Space Research Organization (ISRO) is going to launch a PSLV mission in March where it will release payloads of 30 different satellites in three different orbits.
  • In the space technology race in global level, India with Chandrayaan-1 and Mars Orbiter Mission India has proved that it is one of the forerunners in the race and knows exactly what it is doing.
  • ISRO centers began the launch assembly campaign for launch of the advanced electronic intelligence satellite EMISAT with 29 satellites on board the PSLV-C45 rocket.
ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories