பெரும் உதவி செய்தீர்கள் ஸ்டாலின்: சுப்பிரமணிய சுவாமி கிண்டல்!

subramanian swamy - 2026
File Picture

எங்களுக்காக மிகப்பெரிய உதவி செய்த ஸ்டாலினுக்கு நன்றி என்று சுப்பிரமணியன் சுவாமி  கூறியுள்ளார். இன்று திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கிண்டல் செய்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டின் 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன் இரண்டாவது கட்டமான ஏப்.18 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.  அதனுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் திமுக., அதிமுக., இரு பெரும் கூட்டணிகளை வைத்தே வெற்றி தோல்வி இருப்பதால், இரு அணிகளின் தேர்தல் அறிக்கைகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இவற்றில், இன்று திமுக., அதிமுக., இரு கட்சிகளுமே இன்று காலை தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன.

திமுக., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியுட்ரினோ திட்டம் கைவிடப்படுதல். மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கல்வித் துறையை கொண்டுவர நடவடிக்கை, மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.  நாட்டுக்கும் ஹிந்துவுக்கும் எதிரான தேர்தல் அறிக்கையை தயார் செய்து திமுக சார்பில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதன்மூலம் எங்களுக்காக மிகப்பெரிய உதவி செய்திருக்கிறார்  ஸ்டாலின். அவருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

திமுக., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒரு மாநிலக் கட்சியின் அதிகார வரம்புக்குள் வராத அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அது குறித்த விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் உடனே எழுந்தன.

1 COMMENT

  1. இந்தியாவுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிரான தேர்தல் அறிக்கையை தி.மு.க. வெளியிட்டதால் NDA கூட்டணிக்கு சாதகமான வெற்றி கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories