பாலக்காடு சிபிஎம் அலுவலகத்தில் கம்யூ., இளைஞர் தன்னை கற்பழித்து விட்டதாக கல்லூரி மாணவி புகார்!

dyfi sfi girl - 2026

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆபீஸில் பலாத்காரம் செய்யப்பட்டதாக கேரளாவில் இளம்பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தன்னை ஓர் இளைஞர் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்

பாலக்காடு மாவட்டம் செர்ப்புலச்சேரி பகுதியில் சாலை ஓரத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை அண்மையில் கேட்பாரற்ற நிலையில் கண்டெடுக்கப் பட்டது! அக்குழந்தையை கைப்பற்றிய போலீசார் குழந்தையின் தாயான 21 வயது இளம் பெண்ணை சிரமப்பட்டு கண்டுபிடித்தனர்

போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் கூறிய போது கல்லூரி மாணவியான தாம் மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ எனப்படும் இந்திய மாணவர் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தேன்! கல்லூரி ஆண்டு விழா மலர் தயாரிப்பதற்காக செர்ப்புலச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்துக்கு பத்து மாதத்திற்கு முன் சென்றிருந்தேன்

அப்போது அங்கிருந்த எஸ்எப்ஐ இளைஞர் ஒருவர் என்னை பலாத்காரம் செய்தார்! அதில் நான் கர்ப்பமடைந்தேன்! திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் மற்றவர்களுக்கு சந்தேகம் எழும் என்ற அச்சத்தில் அந்த குழந்தையை சாலையோரத்தில் போட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்

இது குறித்து மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் இந்தக் குற்றச்சாட்டு குறித்து கட்சித் தலைமை விசாரணை நடத்தி உண்மையை கண்டு பிடிக்கும் என்று கூறினார்

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்! இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில் மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் பலாத்கார மையங்களாக மாறி வருகின்றன! பினராயி விஜயன் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories