ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமம்! நெகிழ வைத்த நிர்மலா சீதாராமன்!

nirmala sitharaman in uduppi - 2026

பாரதத்தின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நேற்று (மார்ச் 26) காலை உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்னர் மடத்துக்கு தரிசனத்துக்காக சென்றார்.

அங்கே ஸ்ரீகிருஷ்ண மடத்தில் ஆலயத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்தார். அவருடன் பாஜக வேட்பாளர் உடுப்பி சிக்கமகளூரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஷோபா கரண்டால்ஜே மற்றும் உடுப்பி சட்டமன்ற உறுப்பினர் கே ரகுபதி பட் மற்றும் கட்சியினர் சென்றிருந்தனர்!

பலிமாரு மடத்தின் தலைவர் பர்யாய சுவாமி வித்யா தீர்த்தர் அவர்களை வரவேற்று பகவத் பிரசாதம் வழங்கினார். அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுவாமியிடம் நாட்டுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்காகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தாம் பிரார்த்தனை செய்து கொள்வதாகவும், அதற்கு ஆசி அளிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்

பிறகு நிர்மலா சீதாராமன் தனக்கும் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம், கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோயில் ஆகியவற்றுக்குமான பல வருட நெருங்கிய தொடர்பு குறித்து எடுத்துக் கூறினார்.

பின்னர் அவர் மணிபாலில் நடைபெறும் மீனவர்கள் உடனான கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கிருந்து சென்றார். பாஜக தொண்டர்களுடனும் நிர்வாகிகளுடனும் கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடினார்.

உடுப்பி தொகுதியிலிருந்து போட்டியிடும் ஷோபா கரண்டால்ஜே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது நிர்மலா சீதாராமன் உடனிருந்தார்!

உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தபோது நடந்த ஒரு சம்பவம் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது.

நிர்மலா சீதாராமன் வருவதை அறியாமல் இளைஞர் ஒருவர் பகவானை கண் மூடி அருகே நடப்பது கூட அறியாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிர்மலா சீதாராமனுடன் வந்த காவலர்களும் கோயில் அர்ச்சகரும், அந்த இளைஞரை அங்கிருந்து விலக்க விரைந்து சென்றனர்.

ஆனால் அவர்களைத் தடுத்த நிர்மலா சீதாராமன், அவர்களைத் தடுத்து நிறுத்தினார். பின்னர், அந்த இளைஞர் பிரார்த்தனை செய்து அங்கிருந்து அகலும் வரை ஓரிரு நிமிடங்கள் நிர்மலாவும், ஷோபா கராண்டால்ஜேவும் காத்திருந்தனர். அந்த இளைஞர் அங்கிருந்து நகர்ந்ததும், பின்னர் அவர்கள் சந்நிதி முன் நின்று வணங்கிச் சென்றனர்.

இது குறித்த வீடியோ இன்று இணையதளங்களில் வைரலானது. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்று ஓர் இளைய பக்தருக்காக காத்திருந்த பாதுகாப்பு அமைச்சரின் எளிமையைக் கண்டு அங்கிருந்தவர்கள் வியந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories