December 6, 2025, 7:44 AM
23.8 C
Chennai

ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமம்! நெகிழ வைத்த நிர்மலா சீதாராமன்!

nirmala sitharaman in uduppi - 2025

பாரதத்தின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நேற்று (மார்ச் 26) காலை உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்னர் மடத்துக்கு தரிசனத்துக்காக சென்றார்.

அங்கே ஸ்ரீகிருஷ்ண மடத்தில் ஆலயத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணரை தரிசித்தார். அவருடன் பாஜக வேட்பாளர் உடுப்பி சிக்கமகளூரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஷோபா கரண்டால்ஜே மற்றும் உடுப்பி சட்டமன்ற உறுப்பினர் கே ரகுபதி பட் மற்றும் கட்சியினர் சென்றிருந்தனர்!

பலிமாரு மடத்தின் தலைவர் பர்யாய சுவாமி வித்யா தீர்த்தர் அவர்களை வரவேற்று பகவத் பிரசாதம் வழங்கினார். அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுவாமியிடம் நாட்டுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்காகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தாம் பிரார்த்தனை செய்து கொள்வதாகவும், அதற்கு ஆசி அளிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்

பிறகு நிர்மலா சீதாராமன் தனக்கும் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம், கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோயில் ஆகியவற்றுக்குமான பல வருட நெருங்கிய தொடர்பு குறித்து எடுத்துக் கூறினார்.

பின்னர் அவர் மணிபாலில் நடைபெறும் மீனவர்கள் உடனான கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கிருந்து சென்றார். பாஜக தொண்டர்களுடனும் நிர்வாகிகளுடனும் கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடினார்.

உடுப்பி தொகுதியிலிருந்து போட்டியிடும் ஷோபா கரண்டால்ஜே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது நிர்மலா சீதாராமன் உடனிருந்தார்!

உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தபோது நடந்த ஒரு சம்பவம் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது.

நிர்மலா சீதாராமன் வருவதை அறியாமல் இளைஞர் ஒருவர் பகவானை கண் மூடி அருகே நடப்பது கூட அறியாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிர்மலா சீதாராமனுடன் வந்த காவலர்களும் கோயில் அர்ச்சகரும், அந்த இளைஞரை அங்கிருந்து விலக்க விரைந்து சென்றனர்.

ஆனால் அவர்களைத் தடுத்த நிர்மலா சீதாராமன், அவர்களைத் தடுத்து நிறுத்தினார். பின்னர், அந்த இளைஞர் பிரார்த்தனை செய்து அங்கிருந்து அகலும் வரை ஓரிரு நிமிடங்கள் நிர்மலாவும், ஷோபா கராண்டால்ஜேவும் காத்திருந்தனர். அந்த இளைஞர் அங்கிருந்து நகர்ந்ததும், பின்னர் அவர்கள் சந்நிதி முன் நின்று வணங்கிச் சென்றனர்.

இது குறித்த வீடியோ இன்று இணையதளங்களில் வைரலானது. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்று ஓர் இளைய பக்தருக்காக காத்திருந்த பாதுகாப்பு அமைச்சரின் எளிமையைக் கண்டு அங்கிருந்தவர்கள் வியந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories