அடிபட்ட பத்திரிகையாளருக்கு உதவிய ராகுலின் ‘ஆபத்பாந்தவ’ நாடகம்! சாயம் வெளுத்ததால் சிரிக்குது உலகு!

rahuldrama - 2026

பத்திரிகையாளர் ஒருவர் விபத்தில் மயங்கி விழுவது போலவும், அப்போது ராகுல் காந்தி அங்கே வந்து அவரை காப்பாற்றி தனது கர்சீப்பால் அவரது வியர்வையை துடைத்து உதவுவது போலவும் சினிமா பாணியில் உருவாக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது ராகுல் காந்தி மிகவும் நல்லவர் மற்றும் எளியவர் என்ற தோற்றத்தை இதன் மூலம் ஏற்படுத்த முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் இந்த நாடகத்தை உடன் இருந்து படம்பிடித்த நபர் அம்பலப் படுத்தியிருக்கிறார்.

பத்திரிகையாளர் ஒருவர் புதன்கிழமை நேற்று மதியத்திற்கு மேல் தில்லியில் ஒரு விபத்தில் சிக்கிய தாகவும் அப்போது அந்த வழியாக வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாகவும் ஒரு வீடியோ பதிவு காங்கிரசால் வெளியிடப்பட்டிருக்கிறது! இந்த வீடியோவை விபத்தில் சிக்கிய அந்த பத்திரிகையாளரும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

ராஜேந்திர வியாஸ் என்பவர், ராஜஸ்தானில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் உரிமையாளர். இவர் புதன்கிழமை மதியம் தில்லி ஹுமாயுன் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். அந்த நேரம் அவரை கடந்து சென்றது ராகுல் காந்தியின் கார்.

இந்த விபத்தை கவனித்து விட்ட ராகுல் காந்தி உடனடியாக தனது காரை நிறுத்தி விபத்தில் சிக்கிய மனிதரை காருக்குள் அள்ளிப் போட்டுக்கொண்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்!

 

இது குறித்த வீடியோ பதிவு ஒன்று காங்கிரசின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது! இந்த நிகழ்வை  உடன் வந்த ராஜேந்திர வியாசின் அலுவலக பணியாளர் வீடியோ பதிவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவர் தனது அலுவலகத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாகக் கூறுவது போல், அந்த வீடியோ வெளியாகி இருக்கிறது!

காருக்குள் அமர்ந்து இருக்கும் ராஜேந்திர வியாஸின் நெற்றியில் வழியும் வியர்வையை கர்சீப்பால் துடைத்து விட்ட ராகுல் காந்தியிடம் மீண்டும் ஒருமுறை துடைத்து விடுங்கள் என்கிறார் வியாஸ். அதையும் அவரது அலுவலக பணியாளர் வீடியோவாக எடுத்து உள்ளார்!

அந்த வீடியோவில் சார் மீண்டும் உங்கள் கர்சீப்பால் என் நெற்றியில் துடைத்து விடுங்கள் இந்த வீடியோவை நான் டிவி சேனலுக்காக பயன்படுத்திக் கொள்வேன் என்கிறார். உடனே பயங்கரமாக சிரித்துக்  கொண்ட ராகுல், அவர் கூறியவாறே செய்கிறார். இதையும் அந்தப் பணியாளர் படம் பிடித்துக் கொள்கிறார்

இந்த வீடியோ சம்பவத்தை குறிப்பிட்டு, 48 வயதாகும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது போன்று மிகவும் உதவிகரமாக தனது கௌரவத்தை கூட பார்க்காமல் செயல்படுபவர் என்று சோசியல் மீடியாக்களில் செய்திகள் வலம் வரத் தொடங்கியுள்ளன!

இதனை மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்! ராகுல் காந்தியை போன்று ஒரு மனிதநேயமிக்க மனிதர் உலகத்தில் வேறு எங்கேயும் பார்க்க முடியாது இது போன்று நூற்றுக்கணக்கான சம்பவங்கள் ராகுல் காந்தியின் வாழ்க்கையில் நடந்துள்ளன என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

இது போன்று ஏற்கனவே புவனேஸ்வர் விமான நிலையத்தில் ஒரு பத்திரிகையாளர் கால் இடறி விழுந்த போது ராகுல் ஓடிப்போய் காப்பாற்றினார் என்பதையும் சிலர்  தங்கள் பதிவுகளில் குறிப்பிட்டு வருகின்றனர்!

முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி இந்திய பாதுகாப்பு தொடர்பில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்! செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் வல்லமை மிக்க ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது என்ற அறிவிப்பை அவர் ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் முன்னமேயே குறிப்பிட்டு நாட்டு மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதன் பின்னர் இதுகுறித்து அறிவித்தார்

இந்த அறிவிப்பை கேட்ட ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி மிகச்சிறந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் இது நல்ல நாடகம் என்று குறிப்பிட்டிருந்தார்! ஆனால் ராகுல் தான் ஒரு நாடகத்தை  இவ்வாறு அரங்கேற்றி விட்டு மோடியை நாடக தினம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.

தனது நாடகத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக மோடியை நாடக நடிகர் என்று குறிப்பிட்டார் ராகுல் என்கிறார்கள்!

அதேபோல் நேற்று உடுப்பி சென்றிருந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பக்தர் ஒருவர் வெகு நேரம் கண்ணை மூடி சன்னதி முன் தியானத்தில் இருந்தார் அந்த நேரம் அவருக்காக காத்திருந்து அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின்பே நிர்மலா சீதாராமன் உடன் வந்தவர்கள் உடன் சென்று வணங்கினார்

இது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது! இந்த வீடியோ பரவியது அனைவரும் நிர்மலா சீதாராமன் எளிமையை கண்டு பாராட்டினார்கள்

இப்போது இது ராகுலின் முறை! ஆனால் ராகுல் இதை இயல்பாக செய்யாமல் ஏற்கனவே திட்டமிட்டு செய்தது போல் இந்த வீடியோவில் காட்சிகளும் உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டிருப்பது நாட்டில் பலருக்கும் அருவருப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories