இரண்டு தொகுதியில் நின்றவர் ஒரு தொகுதியில் நிற்கிறார். ஒரு தொகுதியில் நின்றவர் இரண்டு தொகுதியில் நிற்கிறார். அப்ப யார்.. திறமையானவர்…?
சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது, முதன் முறையாக போட்டி இட்டதால், பிரதமர் மோடி, முன்னெச்சரிக்கையாக, வதேதரா..வாரணாசி ஆகிய தொகுதிகளில் நின்று, இரண்டிலும் வெற்றியும் பெற்றார்.
பிறகு வதேதரா தொகுதியை ராஜினமா செய்தார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில், வாரணாசியில் மட்டுமே பாஜக வேட்பாளராக நிற்கிறார். உண்மையை சொல்ல வேண்டும் எனில் இந்த முறையும் இரண்டு தொகுதிகளில் மோடி நிற்கலாம்.
ஆனால் வாரணாசி பாரளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில், தன் தொகுதிக்கு, தன்னால் முடிந்த மட்டும், பல பல நன்மைகளை செய்து, தொகுதி மக்களின் அபரிமிதமான நன்மதிப்பை, பிரதமர் மோடி பெற்று விட்டதால், மிக தைரியமாக, அதே வாரணாசி தொகுதியில் மட்டும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையில் மீண்டும் நிற்கிறார்.
மாறாக, பிரதமர் வேட்பாளர் என அல்லக்கைகள் கோரஸ் இல்லாமல் கூவும் ராகுல் காந்தியோ, இப்போது தோல்வி பயத்தில் இரண்டு தொகுதிகளில் நிற்கிறார்.
70 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. ராகுல் காந்தி 3 முறையாக அமேதி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ராகுலுக்கு முன்பும் 6 முறை அமேதி தொகுதி, காந்தி குடும்ப தொகுதியாக தான் இருந்திருக்கிறது.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக, காந்தி குடும்ப தொகுதியாக அமேதி இருக்கும் நிலையில், காந்தி குடும்பம் அல்லது தற்போது 15 ஆண்டுகளாக பாரளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி, அமேதி தொகுதியை உன்னத நிலையில் வளர்ச்சி அடைய வைத்து, ஒட்டுமொத்த தொகுதி மக்களின் அன்பை பெற்று இருந்தால், தற்போது வேறு தொகுதி தேடி, கேரளா..கும்பகோணம் என அல்லாட வேண்டிய அவசியமே வந்து இருக்காதே.
ராகுல் காந்தி, தன் சொந்த தொகுதியான அமேதிக்கு நல்லது செய்திருந்தால், தொகுதி மக்களிடம் நடு இரவில் எழுப்பி கேட்டாலும், ஒட்டுமொத்தமாக ராகுல் பெயரை தானே சொல்வார்கள். பின் ஏன் இந்த பயம்..?
காங்கிரஸ் ஆட்சி தானே பல ஆண்டுகள் மத்தியில் இருந்தது. அப்போது கூட ராகுல், தன் சொந்த தொகுதிக்கே ஏதும் செய்யாமல் தூங்கி விட்டு, இப்போது வேறு தொகுதி தேடும் ராகுல் காந்தியால், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எப்படி நல்லாட்சி தரமுடியும். அதற்கான தகுதி ராகுல் காந்திக்கு எங்கே இருக்கிறது..?
இதில் தேர்தல் அறிக்கை என்ற பெயரில்..? பொய்..புரட்டு கூறி, எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியோடு, நம்பமுடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசும், ராகுல் காந்தியை, கைக்குழந்தை (பப்பு) என கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்..?
இது புரியாமல், ராகுல் காந்தியை தூக்கி கொண்டு அலையும், ஒரு கொள்ளை கும்பல்களை, என்னவென்று கூறுவது. அட முழு முட்டாள்களா..!
5 ஆண்டுகள் மட்டுமே ஆண்டு கொண்டு இருக்கும் பிரதமர் மோடி, இரண்டு தொகுதிகளில் நிற்காமல், ஒரு தொகுதியில் மட்டுமே நிற்கிறார்.
70 ஆண்டுகள் ஆண்ட, 15 ஆண்டுகளாக தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் ராகுல் காந்தி, ஒரே தொகுதியில் நிற்காமல், இரண்டு தொகுதிகளில் நிற்கிறார்.
ஆக யார்..நல்ல..ஊழலற்ற.. திறமையான பிரதமர் என்று மக்களுக்கே நன்கு தெரியும்..புரியும்.. !
~ குரு
- சுந்தர் ஸ்ரீனிவாசன்