சென்னை: அர்ஜெண்டினாவில் உயிரிழந்த மலை ஏற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபு உடன் நேற்று சென்னை வந்தது. பின்னர் அவரது உடல் அங்கிருந்து சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் மல்லி மஸ்தான் பாபு. மலை ஏற்ற வீரரான இவர், கடந்த மாதம் அர்ஜெண்டினாவில் மலை ஏறும் போது திடீரென மாயமானார். அவரை தீவிரமாகத் தேடிய போது, அவரது உடல் கிடைத்தது. இதையடுத்து அவரது உடல் நேற்று காலை அர்ஜெண்டினாவில் இருந்து விமானம் மூலம் தோகா வழியாக தில்லிக்கு வந்தது. பின்னர் நேற்று பகல் தில்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை நெல்லூர் அரசு அதிகாரி மற்றும் அவரது சகோதரி டாக்டர் மல்லிதுரை சான்மா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் மல்லி மஸ்தான் பாபு உடல் வேனில் ஏற்றப்பட்டு, அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப் படுகிறது.
மல்லி மஸ்தான் பாபு உடல் சென்னை வந்தது; சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி
Popular Categories


