மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயமாகவும், இந்திய கிரிக்கெட்டின் இமயமாகவும் திகழும் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு 42-வது வயது பிறந்தது. அவர் தனது பிறந்த நாளை மும்பையில் தனது குடும்பத்தினருடன் எளிமையாகக் கொண்டாடினார். 2013-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், அவரது சாதனைகளின் தாக்கம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக செயல்பட்டு வரும் டெண்டுல்கர், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்கான கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். அவரது பிறந்த நாளையொட்டி சச்சினுக்கு, உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். தனது பிறந்த நாளின் போது புதிதாக இன்ஸ்டாக்ராம் சமூக வலைத்தளப் பக்கம் உருவாக்கியிருந்தார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்திலும் செய்தியைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அவரது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்தன. அவரும் தன்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you all for your wishes and blessings. — sachin tendulkar (@sachin_rt) April 24, 2015