நேபாள இந்திய தூதரக வளாகத்தில் வீடு இடிந்து ஊழியர் மகள் பலி

Published:

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கட்டடங்கள் பல இடிந்து விழுந்தன. இதில், இந்திய தூதரக வளாகத்தில் இருந்த வீடும் இடிந்து விழுந்தது. அதில், தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர் மதன் என்பவரின் மகள் பலியானார். இந்தத் தகவலை இந்தோனேசிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை தாயகம் திரும்பிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இடிபாட்டில் சிக்கிய ஊழியர் மதனின் மனைவி கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.  

Related articles

Recent articles

spot_img