அன்று நாயுடு! இன்று ராவ்..! ஆனாலும் ராகுல்தான் ‘மைண்ட்’இல்! அதுதான் மு.க.ஸ்டாலின்!

chandrasekara rao stalin - 2026
சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு. சந்திப்பின் போது துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உடன் உள்ளனர்.

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப் படுகிறது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு கட்டத் தேர்தல்தான் மீதமுள்ளது. வரும் 19ம் தேதி அதுவும் முடிந்து, மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.

இந்தத் தேர்தலில், பாஜக., காங்கிரஸ் ஆகிய இரு பெரும் கட்சிகளும் மாநிலங்களில் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இருப்பினும் இந்த இரு கட்சிகளுக்கும் இடம் கொடுக்காமல், சில மாநிலக் கட்சிகள் தனித்தே தேர்தலை சந்தித்தன.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக., காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அப்போது, திமுக., தலைவர் ஸ்டாலின் தான் மத்தியில் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அதற்கு முன்னர் காங்கிரஸுடன் ஒட்டிக்கோ கட்டிக்கோ என உலா வந்த ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, ஸ்டாலினை சந்தித்து கூட்டணி, பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் பேசியதாகக் கூறப் பட்டது.

ஆனால் அதை ஏற்காமல், ஸ்டாலின் தன்னிச்சையாகவே ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில், அதுவரை கூட்டணியில் உறுதியாக நின்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப் பிரதேச மாயாவதி என பிரதமர் பதவியில் கண் வைத்திருந்தோர் எல்லாம் கூட்டணியை விட்டுக் கழன்று கொண்டு, தனித்தே தேர்தலை சந்தித்தனர். இதனால் ஸ்டாலினுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தமுறை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், பெரும்பான்மையைக் கைப்பற்ற வாய்ப்பு குறைவு என்று கூறப் படுவதால், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தேர்தலுக்கு பிந்தைய மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக அவர் அண்மையில் மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்), பினராயி விஜயன் (கேரள முதல்வர்) ஆகியோரை சந்தித்து ஆலோசித்தார்.

இந்நிலையில்தான் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் இன்று சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்தார். மாலை 4.30 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு, சந்திரசேகர ராவ் வரவேண்டும் என்று ஸ்டாலின் வற்புறுத்தினாராம். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் குமாரசாமியையும், சந்திரசேகர ராவ் சந்திக்கவுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories