கூட்டணி விருந்து! நாளை தில்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி!

edappadi pazanisami int.mp4 - 2026

கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நாளை விருந்து அளிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சார்பில் நாளை தில்லியில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் நாளை அமித்ஷா விருந்து அளிக்க உள்ளதாக அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது  என்றும், மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார் அமித்ஷா என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாயின. அதில் பாஜக பெரும்பான்மை பெறும் என்று கூறப்பட்டிருந்தது. பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுவதால் பாஜக கூட்டணியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்!

அதே நேரம் தமிழகத்தில், தேஜகூ., பெரிய அளவில் வெற்றி பெறாது என்றும், திமுக., கூட்டணிக்கே வாய்ப்புகள் அதிகம் என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானதால், அதிமுக. வட்டாரம் சோர்வடைந்தது. இருப்பினும், கருத்துக் கணிப்புகளை தாம் நம்புவதில்லை என்று முதல்வர் கூறிவிட்டார்.

இருப்பினும், நாடாளுமன்ற இடங்களை விட, சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற 22 இடங்கள்தான் இப்போதைக்கு அதிமுக.,வுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், முதல்வர் அதிலேயே குறியாக உள்ளார் என்று கூறப் படுகிறது. ஒருவேளை சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக.,வுக்கு தேவைப்படும் இடங்கள் கிடைக்காமல் போனால், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் தில்லியில் விவாதிக்கக் கூடும் என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories