புது தில்லி: உத்தரப் பிரதேசத்தில் 2009-ம் ஆண்டு தேர்தலின்போது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான வருண்காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைதானார். அஹை அடுத்து அப்போது பிலிபிட் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்நேரம், தடை உத்தரவை மீறி, தற்போது மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராக இருக்கும் கல்ராஜ் மிஸ்ரா தனது ஆதரவாளர்களுடன் நீதிமன்ற அறைக்குள் சென்றதாகவும், அப்போது அங்குள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பிலிபிட் நீதிமன்றம் கல்ராஜ் மிஸ்ராவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் அதில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, கல்ராஜ் மிஸ்ராவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடியாணை பிறப்பித்து நீதிபதி அப்துல் கயூம் உத்தரவிட்டுள்ளார்.
கல்ராஜ் மிஸ்ராவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடியாணை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari