எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும்: பவானி சிங்

Published:

எனக்கு ஆதரவாகவே தீர்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் பவானி சிங் கூறியுள்ளார்.

தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன் என்று பவானி சிங் கூறியுள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள், இதனை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தனர். இது குறித்து பவானி சிங்கிடம் கருத்து கேட்கப்பட்டபோது, “இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணையின் போது எனக்கு ஆதரவாக தீர்ப்பு அமையும் என நம்புகிறேன்” என்று கூறினார் பவானி சிங்.

Recent Posts

supreme-court-India

எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும்: பவானி சிங்

இந்தியா, சற்றுமுன்

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

எனக்கு ஆதரவாகவே தீர்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் பவானி சிங் கூறியுள்ளார். தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் எனக்கு ஆதரவாக தீர்ப்பு…

 

 

 

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான வி்ண்ணப்பம் விநியோகம்

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

 

 

 

 

இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது உச்சபட்ச கொள்கைத் தோல்வி : வி.கே.சிங்

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

 

 

 

Related articles

Recent articles

spot_img