பிப்ரவரி 2018க்குள் மொபைல், ஆதாருடன் இணைக்கப்படாவிடில் சிம்கார்ட் கட் ஆகிவிடும்!

புது தில்லி:

வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காவிட்டால், சிம் கார்டு செயலிழக்க வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டைகளைப் பெறுவது குறித்து தொடர் விழிப்பு உணர்வுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சத்துணவு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் அவசியம் என அறிவுறுத்தப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அனைத்து மொபைல் போன் எண்களும் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாத சிம்கார்டுகள் செயலிழப்பு செய்யப்பட வேண்டும் என்றும் கூறியது. அதுவும் ஒரு வருட காலத்துக்குள், அனைத்து மொபைல் போன் எண்களும் ஆதாருடன் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் கூறியது.

தவறான தகவல்களைக் கொடுத்து மொபைல் எண் பெறுவதைத் தடுக்கும் நோக்கில் இது அறிவுறுத்தப் பட்டது. மேலும், மொபைல் ஆபரேட்டர்களிடம் வாடிக்கையாளரின் கைரேகை உள்ளிட்ட தனிப்பட்ட பயோமெட்ரிக் தகவல்கள் கிடைக்காதவாறு அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

லோக்னிடி பவுண்டேஷன் என்ற அரசு சாரா நிறுவனத்தின் பொது நல வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இதற்கு பதிலளித்த அரசின் தலைமை வழக்கறிஞர், அரசு இதனை படிப்படியாக செய்து வருவதாகவும், 105 கோடி மொபைல் போன் எண்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும், இவ்வளவு பெரிய சந்தாதாரர்களின் பட்டியலை முழுமையாக இணைப்பதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் கூறிய அவர், 90 % பயனாளிகள் ப்ரீபெய்ட் இணைப்பையே வைத்துள்ளார்கள் என்று கூறியிருந்தார்.

மேலும், அடுத்த முறை ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர் வரும்போது, ஆதார் எண்ணுடன் கூடிய ஒரு படிவத்தை பூர்த்தி செய்து அளித்தால் மட்டுமே ரீசார்ஜ் செய்யப்படும் என்றும், அவ்வாறு மூன்று வாய்ப்புகள் வரை அவர்களின் மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், பின்னர் இது கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப் படும், இல்லாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories